Tuesday, April 3, 2012
Brahmin 'class' in India
India being a caste and class nation, 3% of brahmins rule 97% of other caste people. From president of India, Petroleum minister of india, CEO of 99% of companies like India Cement etc are Brahmins. How these people suck blood of others? see in this video :
Sunday, May 8, 2011
நவீன ராமானுஜர் கருணாநிதி!!
அந்தக் கால ராமானுஜர் தாழ்த்தப்படோருக்கு பூணூல் மாட்டிவிட்டு பிராமணர் ஆக்கினார் ...
கடந்த பல மாதங்களாக, தமிழினத் தலைவர் கருணாநிதி, ராசா மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை பற்றிப் பேசுகையில், " தாழ்த்தப்பட்டவர் எனபதால் அநியாயமாக பழி போடுகிறார்கள் ஏமாற்றும் ஆரிய பிராமணர்கள்" என்றார். இப்போது கருணாநிதி குடும்பம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய ராம் ஜெத் மலானி "ராசா மேல்மட்டும்தான் தவறு.. கனிமொழி ரொம்ப நல்லவர்.. ஏமாற்றியவர் ராசாதான்.." என்று வாதாடியுள்ளார். அதாவது இப்போதைய கருனாநிதியின் கொள்கை இது : "கனிமொழி திராவிடர் என்பதனால் அநியாயமாகப் பழிபோடுகிறார்கள்... ஏமாற்றியது ராசாதான் "
அப்டின்னா, இப்ப கனிமொழி தான் திராவிடர், ஏமாற்றும் ராசா பிராமணரா? என்னா புரட்சி.. ராசாவுக்கு பூணூல் போட்டு கைகழுவிவிட்ட நவீன ராமானுசர் கருணாநிதி அவர்கள் வாழ்க.. :-)
கடந்த பல மாதங்களாக, தமிழினத் தலைவர் கருணாநிதி, ராசா மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை பற்றிப் பேசுகையில், " தாழ்த்தப்பட்டவர் எனபதால் அநியாயமாக பழி போடுகிறார்கள் ஏமாற்றும் ஆரிய பிராமணர்கள்" என்றார். இப்போது கருணாநிதி குடும்பம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய ராம் ஜெத் மலானி "ராசா மேல்மட்டும்தான் தவறு.. கனிமொழி ரொம்ப நல்லவர்.. ஏமாற்றியவர் ராசாதான்.." என்று வாதாடியுள்ளார். அதாவது இப்போதைய கருனாநிதியின் கொள்கை இது : "கனிமொழி திராவிடர் என்பதனால் அநியாயமாகப் பழிபோடுகிறார்கள்... ஏமாற்றியது ராசாதான் "
அப்டின்னா, இப்ப கனிமொழி தான் திராவிடர், ஏமாற்றும் ராசா பிராமணரா? என்னா புரட்சி.. ராசாவுக்கு பூணூல் போட்டு கைகழுவிவிட்ட நவீன ராமானுசர் கருணாநிதி அவர்கள் வாழ்க.. :-)
Friday, May 6, 2011
சட்டி சுட்டதடா... அருமையான பாட்டு...
the problem is MSV's music and visual direction. Too much of mind boggling music carries away the original meaning of the song and so is direction... as if it is a dracula movie the song is taken with mood changing visuals and stunning music.. but the best part of it is Kannadaasan that is camouflaged ... i whole heartedly felt these lines :
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லதுகெட்டது தெரிந்ததடா ..
..............................................
................................
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
..............................................
................................
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா...
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா..
உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.
the problem is MSV's music and visual direction. Too much of mind boggling music carries away the original meaning of the song and so is direction... as if it is a dracula movie the song is taken with mood changing visuals and stunning music.. but the best part of it is Kannadaasan that is camouflaged ... i whole heartedly felt these lines :
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லதுகெட்டது தெரிந்ததடா ..
..............................................
................................
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா...
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
..............................................
................................
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா...
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா..
உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள்.
Thursday, August 12, 2010
NONE was raped in Kandhamaal
http://www.orissadiary.com/CurrentNews.asp?id=20245
Though earlier the Nun claimed she was raped causing the PM Manmohan Singh to apologize to International christians, now she says she was slapped by two youths, who she identified and said they pulled her by holding saree and that is all about.
Christians missionaries killed the swami Lakshmanaananda and tried to create scenes using the death of swamiji causing communal violence and agitations of christains in several parts of the country.
Manmohan singh said he feels ashamed of the happenings in Kandhamaal especially when the nun was raped. However, he did not feel anything when the reformer, the swamiji who helped thousands of aborigin, backward people was killed.
Though earlier the Nun claimed she was raped causing the PM Manmohan Singh to apologize to International christians, now she says she was slapped by two youths, who she identified and said they pulled her by holding saree and that is all about.
Christians missionaries killed the swami Lakshmanaananda and tried to create scenes using the death of swamiji causing communal violence and agitations of christains in several parts of the country.
Manmohan singh said he feels ashamed of the happenings in Kandhamaal especially when the nun was raped. However, he did not feel anything when the reformer, the swamiji who helped thousands of aborigin, backward people was killed.
கருணாநிதிக்கு அறிவுரை

==============================================
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0907/20/1090720005_1.htm
ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக் கொண்டிருப்பவன்
என்றும் இனியும் விமர்சிக்க இருப்பவன் என்றும் முதலமைச்சர்
கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கன்னடத்தில் எழுதிய,
‘‘ஸ்ரீ ராமாயணப் பெருந்தேடல்’’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின்
வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. முதல் பிரதியை
முதலமைச்சர் கருணாநிதி வெளியிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்
கொண்டார்.
விழாவில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், ராமாயண நூல் வெளியீடா?
அதிலே கருணாநிதி பங்கேற்பதா? என்று பலர் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
ஆமாம், ராமாயண நூல் வெளியீடுதான், அதில் கருணாநிதி பங்கேற்றது
மாத்திரமல்ல, அதை வெளியிட்டும் உரையாற்றியிருக்கிறார் என்பதுதான் இன்றைய
செய்தி. இதில் ஒன்றும் முரண்பாடில்லை.
நான், ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக்
கொண்டிருப்பவன். இனியும் விமர்சிக்க இருப்பவன். புத்தகத்தின் பெயர்,
ராமாயணப் பெருந்தேடல். தேடல்கள் என்றால், கண்டுபிடிக்க முடியாமல் இந்த
நூலிலே புதைந்து கிடக்கிற கருத்துக்களை தேடி எடுத்து மக்களுக்கு
உணர்த்துகிற அந்தப் பணியை இந்த நூலின் மூலம் வீரப்ப மொய்லி செய்துள்ளார்.
இந்த முதல் பாகத்தில் ராமாயணக் கதையின் தொடக்கத்தில் இருந்து கானகம்
சென்றுள்ள ராமனின் பாதுகையை பெற்று பரதன் நாடு திரும்பியது வரை
எடுத்துரைக்கப்படுகிறது. அதைத்தான் அவ்வை நடராஜன் பேசும்போது,
‘‘எங்களுடைய கலைஞர் பரதாயணம் எழுதியவர்’’ என்று குறிப்பிட்டார். ராமன்
காட்டில் கடும் வெயிலில் துன்பப்படுகின்ற நேரத்தில் அவன் பாதுகையையும்
பிடுங்கி கொண்டு வந்து விட்டான் என்று பரதனை குறை கூறி நான் எழுதிய அந்த
புத்தகத்தின் பெயர்தான் பரதாயணம்.
வீரப்ப மொய்லியின் சிந்தனைகள் இந்த நூலில் எப்படி இழையோடி புரட்சி
எரிமலையாக வெடித்து சிதறியிருக்கின்றன என்பதை பல பாடல்கள் வாயிலாக
என்னால் உணர முடிகிறது. என்னுடைய பால பருவத்தில் நான் தீவிரமான
பகுத்தறிவுவாதி. இப்போதும் அது தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ராமாயணம் ஒரே கதை என்று சொல்லப்பட்டாலும் சில குறிப்பிட்ட அம்சங்களை
ஒவ்வொரு நூல் ஆசிரியர்களும் வேறுபாடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக வால்மீகி ராமாயணத்தைத் தொடர்ந்து தமிழிலே எழுதிய கம்பர், தனது
கம்ப ராமாயணத்தில் கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் பற்றிக் கூறும்போது,
இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, கவுதம முனிவராக உருமாறிச் சென்று
வஞ்சகமான முறையில் அகலிகையை கூடுகிறான் என்றும்; இதனை அறிந்த கவுதம
முனிவர் அகலிகையைக் கல்லாகச் சபிக்கிறார் என்றும் அந்தக் கதை முடிகிறது.
அப்போது கல்லாக மாறிய அகலிகை, ராமன் காட்டுக்கு வந்த போது அவன் கால்
பட்டு மீண்டும் தனது உருவை அடைந்து கவுதம முனிவரோடு சேர்ந்து வாழ்ந்தாள்
என்றும் கூறியுள்ளார்.
இது வீரப்ப மொய்லியால் தாங்கிக் கொள்ளக் கூடிய சம்பவமாக இல்லை. ஒரு பெண்
எந்த அளவிற்கு இழிவுபடுத்தப்படுகிறாள் என்ற ஆத்திரம் பீறிடுகின்ற
காரணத்தால், அவர் இதை மாற்றி எழுதுகிறார். இதிலே குற்றவாளி அகலிகையா,
தேவேந்திரனா என்று கேட்டு, இந்திரன்தான் குற்றவாளி என்று ஆண்
வர்க்கத்தைச் சாடுகிறார் வீரப்ப மொய்லி. ஒரு நீதியை பெண்ணுக்கு
வழங்குகிறார். அந்தப் பெண் கையறு நிலையிலே இந்திரனிடம் தவறு இழைக்க
வேண்டிய அவசியத்திற்கு ஆளானாள் என்று இவர் எழுதுகிறார்.
வால்மீகி ராமாயணத்தில் வந்த அகலிகை வேறு, கம்ப ராமாயணத்தில் காட்டுகின்ற
அகலிகை வேறு, ராஜாஜி எழுதிய ராமாயணத்திலே காட்டப்படுகின்ற அகலிகை வேறு,
இவர்கள் எல்லாம் தவறு இழைத்த அகலிகை, ஆனால் நான் இதோ காட்டுகின்ற அகலிகை
தவறு இழைக்குமாறு செய்யப்பட்ட பெண் என்று இந்திரன் மீது கடும் கோபத்தைக்
காட்டுகிறார். அகலிகை தவறு செய்ய தூண்டப்பட்டு சபிக்கப்பட்டவள் என்றார்
துளசிதாசர். கவுதம முனிவர் வேடம் போட்டு வந்தவர் இந்திரன் தான் என்பதை
பிறகு உணர்ந்தும் கூட அகலிகை அதற்கு சம்மதித்தாள் என்பது கம்ப ராமாயணம்.
கம்ப ராமாயண பக்தர்கள் யாராவது இருந்தால் என் மீது கோபித்துக் கொள்ளக்
கூடாது. உள்ளதைத்தான் சொல்கிறேன்.
ஏன் இவற்றை சொல்கிறேன் என்றால் இளமையிலேயே ஊறிய பகுத்தறிவு, அதன் காரணமாக
எழுகிற கேள்விகள் அந்தக் கேள்விகள் ராமாயணத்தைப் பற்றியும்
வந்திருக்குமேயானால் வீரப்ப மொய்லி பொறுத்துக் கொள்ள வேண்டும். “இந்த
நூலில் பெண்ணுரிமை கருத்துகளை, ஏழை எளிய மக்கள் வாழ்வில் இருக்கும்
கஷ்டங்களை எரிமலை போல அவர் வர்ணித்துள்ளார். அதற்காக நான் அவரை
பாராட்டுகிறேன்'' முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
=============================================================================
திரு கருணாநிதி ,
0)அகலிகைகள் கல்லாக மாற, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின்மேல் கண்வைக்கும் உங்கள் போன்றோர் தானே காரணம் ?
1) அகலிகை பற்றி வருத்தப்படும் அளவுக்கு நீங்கள் பெண்களின் மேல் கண்ணியமான பார்வையோ மதிப்போ உள்ளவரா ? எதிர்க்கட்சி செயலரும் முன்னால் முதல்வரையும் கூட 'முன்னாள் நடிகை' என்று குறிப்பிட்டு அநாகரீகமான சிந்தனைகளை வெளியிட்டவர் நீங்கள்.
2) இராமாயணத்தை சொல்லிகொடுத்தால், தந்தையை மதித்து காட்டுக்கும் செல்லவேண்டும் என்பதும், அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுத்தலையும், தியாகத்தையும் புரிந்துணர முடியும். ஆனால் நீங்கள் இராமாயணத்தை உங்கள் மனைவிகளின் மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தபோது 'காட்டுக்கு சென்ற ராமனிடம் பரதன் செருப்பையும் ஏமாற்றி வாங்கி வந்துவிட்டான்.. தம்பியை நம்பாதே ' ('செருப்பு' சிந்தனை) என்று திராவிட முறைப்படி விளக்கி இருக்கிறீர்கள். விளைவு: ஒரு மனைவியின் மகனான ஸ்டாலின் (தம்பி)ஏமாற்றிவிடுவான் என்ற ஆத்திரத்தில் இன்னொரு மனைவியின் மகன், (அண்ணன்) காண்டாமிருக நெஞ்சன் அழகிரி தினகரன் அலுவலகத்தில் புகுந்து இளம் பொறியாளர்களைக் கொலை செய்யும் அளவுக்கு வெறி பிடித்து அலைகின்றனர். ராமன் விட்டுக்கொடுத்தான். அழகிரி கொலை செய்கிறான். கொலைகாரனை உருவாக்கி இதில்என்ன பெருமை?
இராமாயணத்தில் புத்திர சோகத்தை தசரதன் எதிர்கொள்கிறான் உயிர்விடுகிறான். காரணம் : எதிர்பாராத விபத்தாக, நீர் கொள்ளச் சென்ற சிராவணனின் மேல் அம்பெய்ததுதான்.
அனால் உங்கள் இரத்த சம்பந்தம் பலரை ரத்தம் சிந்த வைக்கிறதே, அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு நீதிபதி "சன் டிவில காமிச்சதேல்லாம் பொய்.. ஏசி ஷார்ட் சர்க்யூட் னால்தான் தீ விபத்து நடந்து செத்துட்டாங்க" என்று அழகிரியை விடுதலை செய்திருக்கிறார்.
விபத்துக்கு தண்டனை அனுபவிக்கச் சொன்ன இராமாயணம் எங்கே? கொலையை விபத்துதான் என எழுதும் நீங்கள் எங்கே ?
கொலை, காம வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றை விட்டுவிடுங்களேன்? ஒவ்வொரு கிறிஸ்தவனையும், இஸ்லாமியனையும், ஹிந்துவையும் சகோதர பாசத்தோடு நல்ல தமிழனாக உருவாக்க முடியும். ஆனால் இன வெறியைத்தூண்டி கொலைகாரானக்குவது உங்கள் 'செருப்பு' சிந்தனைகள் தான். உங்கள் பண வெறிதான் அப்துல் கலாமாக மலரவேண்டிய இஸ்லாமியன் மதாநியாக மாறுவதருக்கு காரனாக உள்ளது. சற்றே நேர்மையுடன் நடக்கலாமே?
--
Jay
Wednesday, July 28, 2010
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை கோரி
மதசார்பற்ற அரசு மத சார்பற்ற அரசியல் மதசார்பற்ற நாடு என்று நமது அரசியல் வாதிகளால் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டிருக்கின்ற இந்நாட்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதல் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி வரை பல ஆயிரக்கணக்கில் நிதிஉதவி செய்யப்படுகிறது.
ஆனால் ஹிந்து மாணவர்களுக்கு எதுவும் கிடையாது. நாட்டில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒன்றும் கிடையாது. சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்று பிரதமரே சொல்கிறார். இந்நிலையில் ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி நிதி வழங்கிடவேண்டும் என்று பா ஜ க போராடி வருகிறது. கடந்த 20௦ நாட்களாக தமிழகம் எங்கும் மாவட்ட வாரியாக பா ஜ க ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆர்பாட்டம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மாணவர்கள் பெண்கள் என் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
கடந்த 25 ஆம் தேதியன்றும் கன்யாகுமரி மாவட்ட ஆர்பாட்டம் நாகர்கோவிலில் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. சுமார் ஒரு லக்ஷம் பேர் பங்கு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஆர்பாட்டத்தினைப் பற்றி நமது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. எதோ பெயரளவிற்கு ஒரு மூலையில் சிறிய செய்தியை பிரசுரம் செய்தும் தொலைக் காட்சிகளில் சில வினாடிகள் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.
Tuesday, July 13, 2010
தி கராத்தே கிட் (The Karate Kid) - திரை விமர்சனம்

1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ' தி கராத்தே கிட்' திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ' தி கராத்தே கிட்' . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர்
டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் 'ட்ரே பார்க்கரி'ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை வாய்ப்புக்கள் சீனாவுக்கு இடம்பெயர, பிழைப்புக்காக மகனுடன் பெய்ஜிங்கில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். முற்றிலும் அமெரிக்க பழக்க வழக்ககங்கொண்ட சிறுவன் ட்ரே பார்க்கர் பெய்ஜிங் சூழலில், மஞ்சள் கலாச்சாரத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் திரைக்கதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கதை தொடங்குகிறது.
ட்ரே வீதியில் விளையாடச் செல்லும்போது, வயலின் பயிற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு சீனச் சிறுமியைச் சந்தித்துப் பேசுகிறான். ட்ரேவின் கேசத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆப்பிரிக்க மணப்பின்னல் அலங்காரத்தை அவள் ஆர்வத்துடன் தொட்டுப் பார்க்கிறாள். இது அவள் மேல் பற்று கொண்டிருக்கும், தெருவின் ரவுடிப்பையன் 'செங்'கிற்கு ஆத்திரமூட்ட, செங் ட்ரேவைக் நையப் புடைக்கிறான். அத்தோடு நில்லாமல் பள்ளியிலும் செங்கின் அடாவடிகள் தொடர பரிதவித்துப் போகிறான் ட்ரே. பெய்ஜிங்கின் மிகப்பெரிய குங்ஃபு பள்ளியில் செங் பயிற்சி பெறுவதை அறிந்து கொள்கிறான் ட்ரே. அதிர்ஷ்டவசமாக, ட்ரே தங்கியிருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்பின் மராமத்துப் பணியாளராக இருக்கும் திருவாளர் ஹான் (ஜாக்கி சான்), ட்ரேவுக்குக் குங்ஃபு கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார். செங் கற்றுக்கொள்ளும் குங் ஃபு பள்ளியின் மாஸ்டரும், திரு. ஹானும் , சீன சிறுவர் குங்ஃபு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்கள் இருவரும் மோதுவார்கள் எனவும் அதுவரை ட்ரேவுக்கு மற்ற சிறுவர்கள் எந்த தொந்திரவும் தரலாகாது எனவும் ஒப்புக்கொள்கின்றனர்.(1984 ம் வருடத்திய கராத்தே கிட்டிலும் இது உண்டு.) ஹானின் கடுமையான பயிற்சியின் விளைவாக திறம்பெறும் ட்ரே, சீன குங்ஃபு சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் செங்கை சந்திப்பது கதையை முடிவுக்கு இட்டுச் செல்கிறது.
இந்தப் படத்தின் பலமாக அமைவது பெய்ஜிங்கின் தொழில் வளர்ச்சி, சீனப் பெருஞ்சுவரின் கம்பீரம், பசுமை மிகுந்த மலைகள் ஆகியவற்றைக் காண்பிக்கும் காமெரா படத்தொகுப்பு. குறிப்பாக, குங்ஃபு பயிற்சிக்கு எழில் மிகுந்த மிக நேர்த்தியான இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் இரயில் பயணக் காட்சிகள், மலைக்கோட்டையின் பழங்காலக் கட்டிட அமைப்பு, பிரம்மாண்டம் ஆகியவற்றை ஒரு சுற்றுலா போலக் காண்பித்திருப்பது கொடுத்த பணத்துக்கு இதமாக இருக்கிறது. கடைசி நாள் குங்ஃபு பயிற்சியை நிழல் ரூபத்தில் காண்பிப்பதும் அருமை. படத்தின் மற்ற இரண்டு பலங்கள் ஜாக்கி சானும், நகைச்சுவையும். ஐம்பத்தாறு வயதாகும் ஜாக்கி சான் திரைப் படத்தில் வரும் காட்சிகள் சற்று குறைவென்றாலும் அவருக்கே உரிய வேகமும், வாடிக்கையான ஹாஸ்யமும் சேர்த்து அசத்துகிறார். படம் நெடுக அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்தை தொய்வில்லாமல் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.
ஆனால் முதிர்ச்சியுள்ள ரசிகர்கள் படத்தில் வரும் ஓட்டைகளை எளிதாகக் காணலாம். சாதாரண ரசிகர்களுக்கு, படத்தில் உள்ள குங்ஃபு பயிற்சிக் காட்சிகளில் நல்ல ஆழமும், கடுமையும் த்ரில்லிங்காக அமையும் என்றாலும் உண்மையான குங்ஃபு அல்லது கராத்தே டெக்னிக் என்பது ஒரு மருந்துக்குக் கூட கிடையாது. சாம்பியன்ஷிப் போட்டியிலோ சண்டையை விட வெகு வேகமாகக் கேமரா சுழன்று தலைகளையே திரும்பத் திரும்பக் காட்டுகிறது. என்ட்டர் தி டிராகன் , தி ப்ளெட் ஸ்போர்ட் படங்களில் வந்த அதே மாதிரி போட்டி என்றாலும் சண்டையின் ஆழம் ஒரு 10% கூட கிடையாது. இறுதிப் போட்டியின் கடைசிச் சுற்று எதிர்பாராத விதமாக வெறும் அரை நொடியில் முடிகிறது. இதெல்லாம், தற்காப்புக்கலை ஆர்வத்துடன் படம்பார்க்கச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கும். ட்ரே பார்க்கராக நடிக்கும் ஜேடன் ஸ்மித்துக்கு, வில் ஸ்மித் போன்று நடிப்போ சண்டையோ எடுபட இன்னும் சில வருடம் பிடிக்கும். இவ்வளவு ஏன், தலைப் பின்னலும், தளிர் முகமும் கொண்டு 'சிறுமியோ?' என சில சமயம் எண்ண வைக்கும் அளவுக்கு பாத்திரத்துக்கு பொருத்தமில்லாத உருவம். இந்நிலையில் ட்ரேவின் காதலும், சீனக் காதலியின் அரை நிமிட தப்பாட்டமும் அமெரிக்காவில் மட்டுமே ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. செங்கின் வன்மத்துக்கும் போதுமான காரணம் இல்லை.
மொத்தத்தில் அப்பட்டமான குறைகளுடன் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்
படம் முடிகையில் அமெரிக்க ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செயதது(அமெரிக்க சிறுவன் சீனாவில் ஜெயித்துவிட்டானாம்), அவர்கள் இன்னும் அமெரிக்க வீண் பெருமையில், கற்பனையில் லயித்து இருக்கிறார்கள் என்பதையே காட்டியது. பத்திரிகைகள் இப்படத்தைப் பாராட்டியும், குறிப்பாக ஜேடன் ஸ்மித்தின் காதல், சண்டை, நடிப்புத் திறமைகளைப் புகழ்ந்து எழுதி இருப்பதும் இவர்கள் , 'politically correct' ஆக இருக்க விரும்புவதையே காட்டுகிறது.
Subscribe to:
Posts (Atom)
