Wednesday, October 4, 2017

என்னவானான் போதி தர்மன்?


போதிதர்மனை விஷம் வைத்து சில சீனர்கள் கொலை செய்கிறார்கள். புதைத்த இடத்தில் கோவிலும் எழுப்பப் படுகிறது.
வடக்கு வெய் ராஜ்யத்துக்கான சீன தூதுவன் சாங்யூன், பாமீர் முடிச்சில் போதிதர்மன் கையில் ஒற்றை செருப்புடன் செல்வதை பார்க்கிறான். வணங்கிவிட்டு, "குருவே நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்கிறான். "தாய் நாட்டிற்கு திரும்பி செல்கிறேன்" என்று பாரத திசையை காண்பிக்கிறார் போதி தர்மர். "என்னை சந்தித்ததை வெளியில் சொல்லாதே. ஆபத்து நேரும்".
சாங்யூன் சீனதேசத்தை அடைகிறான். மன்னனிடம் சொல்கிறான்: "தமோ குருவைப் பார்த்தேன். பாரததேசத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒரே ஒரு செருப்புடன் அரவமின்றி நடந்து கொண்டிருக்கிறார்". மன்னன் சொல்கிறான்:"குருநாதர்  இறந்து பலவருடம் ஆயிற்று. பொய் சொன்னால்  உனக்கு தண்டனை நிச்சயம்". சாங்யூன் ஸ்திரமாக அதையே சொல்லிக்கொண்டிருக்கவே சந்தேகம் வர கல்லறையை தோண்டுகிறார்கள். உள்ளே போதிதர்மன் உடலோ, ஆயுதங்களோ, துணிகளோ இல்லை . மற்றொரு செருப்பு மட்டும்.
(பிகு: சீன ஓவியங்களில் புத்தரையும், போதி தர்மனையும் பெரிய நெற்றி,பெரிய கண்களோடு, நிறைய ரோமம், நல்ல உடற்கட்டோடு வரைவது மரபு. அதற்கு காரணம் சீனர்கள் சிறுகண்கள் , நெற்றி, ரோமமே இல்லாமல் நோஞ்சானாக இருந்ததுதான் )



--------------------------------

Tuesday, November 29, 2016

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை
====================================
1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
குரு சொல்லும் வசனம் 
2.தள்ள வேண்டியது எது ?
வீண் செயல் 
3.குரு யார் ?
உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .
4.மிகவும் இனியது எது ?
தருமம் 
5.எவன் சுத்தம் உள்ளவன் ?
மனச்சுத்தம் உள்ளவன் .
6.எவன் பண்டிதன் ?
விவேகி .
7.எது நஞ்சு ?
குரு மொழியை அலட்சியம் செய்தல் 
8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .
9.எதிரி யார் ?
முயற்சி இல்லாச் சோம்பல் .
10.முழுக் குருடன் யார் ?
ஆசை வலைப்பட்டவன் .
11.சூரன் யார் ?
பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .
12.செவிக்கு அமுதம் எது ?
சாதுவின் உபதேசம் .
13.பெருமை எதனால் ?
எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .
14.தாழ்வு எது ?
தாழ்ந்தவனிடம் யாசிப்பது .
15.எது வாழ்வு ?
குற்றமின்மை .
16.எது மடமை ?
கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .
17.நரகம் எது ?
பிறர் வசம் இருப்பது .
18.செய்யத்தக்கது எது ?
உயிருக்கு இனிமை .
19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
அகம்பாவம் .
20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
மறைவில் செய்த பாவம் .
21.முயற்சி எதன் பால் ?
கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .
22.எதிலிருந்து விலகுவது ?
தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .
23.விருப்புடன் எதைச் செய்வது ?
தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .
24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .
25.சாது யார் ?
ஒழுக்கமுள்ளவன் .
தீ நடத்தையுள்ளவன் .
26.உலகை வெல்பவன் யார் ?
உண்மையும் பொறுமையும் கொண்டவன் .
27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .
28.குருடன் யார் ?
காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .
29.செவிடன் யார் ?
நல்லுரை கேளாதவன் .
30.ஊமை யார் ?
தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .
31.ஈகை எது ?
கேளாது கொடுத்தல் .
32.நண்பன் யார் ?
தீமை புகாது தடுப்பவன் .
33.கவனமாக வாழ்வது எப்படி ?
இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடிய செல்வன் ஆதலே .
34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
இயல்பாகவே அடக்கமுடையவரை .
35-உலகம் யாருக்கு வசப்படும் ?
தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
36.விபத்து யாரைத் தீண்டாது ?
அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .
38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .
39.கவலை இல்லாதவன் யார் ?
பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .
40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை எவை ?
கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .
41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
கருமித்தனம் .
42.பெரிய தீட்டு எது ?
கடன் தொல்லை .
43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
தானும் மனத்துயர் இன்றிப் பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .
44.நம்பத்தகாதவன் யார் ?
சதா பொய் சொல்லுபவன் .
45.பொய் எப்போது தீதில்லை ?
தருமப் பாதுகாப்பின் போது .
46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
ஆரோக்கியம் .
47.யார் தூய்மையானவன் ?
எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .
48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
இளமை ,செல்வம் ,ஆயுள் .
49.சாதிக்க வேண்டியது எது ?
என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .
50.துக்கம் இல்லாதவன் யார் /
கோபம் இல்லாதவன் .
51.அந்தணன் உபாசிப்பது எவரை /
காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .
52.இவற்றில் உள்ளது என்ன ?
சுத்த சிவ தத்துவம் .
53.யார் பிரத்தியட்ச தேவதை ?
மாதா .
54.பூஜ்ய குரு யார் ?
தந்தை .
55.சர்வதேவதாத்மா யார் ?
வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்ட விப்ரன் .
56.எதனால் குலம் அழியும் ?
சாது ஜனங்களை புண்படுத்துவதால் .
57.யார் வாக்கு பலிக்கும் ?
சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.

Tuesday, January 5, 2016

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?

காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து  
ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.


1. சித்திரை மாஸம்
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது

2. வைகாசி மாஸம்
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

3. ஆனி மாஸம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
4. ஆடி மாஸம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
5. ஆவணி மாஸம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
6. புரட்டாசி மாஸம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.
7. ஐப்பசி மாஸம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
8. கார்த்திகை மாஸம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
9. மார்கழி மாஸம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
10. தை மாஸம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
11. மாசி மாஸம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
12. பங்குனி மாஸம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

Tuesday, May 12, 2015

Wednesday, August 20, 2014

ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரன ஆயுதஹ ;


பீஷ்மர் பகவானை ஆயிரம் பெயர்களால் வணங்கியதே பிற்காலத்தில் விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப் பெயர்பெற்றது. பீஷ்மர் விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும் நன்குணர்ந்தவர். கிருஷ்ணனை குழந்தையில் இருந்து கண்டு ரசிக்கும் பெரும்பேறு பெற்றவர். அவர் அப்போதுதான் சிலநாட்கள் முன்பு, தானே நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை குறிப்பிட்டு பஹவானை துதிக்கிறார்:

ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரண ஆயுதஹ ;

இதன் பின்புலம் என்ன?

குருட்ஷேத்திரத்தில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஓர் இரவு. துரியோதனன் பீஷ்மாச்சார்யரிடம் வந்து நிர்பந்தித்துப் பேசுகிறான். "பிதாமகரே, பீமனும், அர்ஜுனனும் நம் படையை துவம்சம் செய்கிறார்கள். பல யானைகளை, தேர்களை முடக்கிவிட்டார்கள். கிருஷ்ணனோ ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று வாக்களித்து இருந்தாலும், தன்னுடைய சூழ்ச்சியால் அவர்களுக்கு பக்க பலமாக திகழ்கிறார். நீங்களோ அவர்கள் மேல் கொண்ட அன்பால், உக்கிரமில்லாமல் சண்டையிடுகிறீர்கள். நீங்கள் நாளைக்காவது அர்ஜுனனை நேரடியாக சந்தித்துத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்கிறான். ராஜதுரோகம் செய்ல் ர்மாகாது என்பதால் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார் பீஷ்மர்.

துரியோதனன் கூடாரத்தைவிட்டு வெளியேறியவுடன், முக்காடிட்ட குனிந்த  தலையுடன் ஒரு பெண் பீஷ்மரை நமஸ்கரிக்கிறாள். "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசிர்வத்திக்கிறார் பெருமகன் பீஷ்மர். முக்காடு விலக்கி தலைநிமிர்ந்தால் தெரிகிறது அர்ஜுனன் மனைவி சுபத்திரையின் மேகம் விலகிய  நிலவு போன்ற முகம்.  "பிதாமகரே, உங்கள் வாயால் என்னை தீர்க்க சுமங்கலியாக இருக்கும்படி வாழ்த்தினீர்கள். ஆகவே என் கணவனை நீங்கள் போரில் கொல்லக் கூடாது" என்று  காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  முகம் நீரிருக்கும் நிலவாக ஆகும்படி  அழுகிறாள். எதிர்பாராத இந்த நிகழ்வால் ஆச்சரியம் அடைந்த பிதாமகர், கூடாரத்துக்கு வெளியே ஓடிவந்து பார்க்கிறார். ஓரத்தில் கிருஷ்ண பகவானோ ஒளிந்துகொண்டு இருக்கிறார். "கிருஷ்ணா இதுவும் உன் விளையாட்டு தானா? என் வாக்கை மீறி நான் அர்ஜுனனை கொல்ல முடியாது என்ற நிலையைக் கொண்டுவந்த உன்னை, நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கை மீறி ஆயுதமேந்த வைக்கிறேன் பார்" என்று சபதமெடுக்கிறார் பீஷ்மர். 


அடுத்தநாள் போரில், வாக்குக் கொடுத்ததால் அர்ஜுனனை கொல்லத்தான் முடியாது, ஆனால் நிராயுதபாணியாக்கி கைது செய்திட முடியுமே என்று அர்ஜுனனுடன் போர் செய்கிறார் பீஷ்மர். அர்ஜுனன் மேல் அம்பு எய்யாமல், ஆனால் அவனின் வில்லை குறிவைத்து அம்பெய்கிறார். அர்ஜுனன் பல விற்களுக்கு பலப்பிரயோகம் செய்து நாணேற்ற, நாணேற்ற ஒவ்வொன்றையும் உடைத்தெறிகின்றன பீஷ்மரின் அம்புகள். தொடர்ந்த தாக்குதலால் களைத்துப் போன அர்ஜுனன் மூர்ச்சையாகி சரிகிறான். தன் நண்பனும் பக்தனுமாகிய அர்ஜுனன், தன் கண் முன்னால் சரிந்து விழுவதைப் பார்த்து பதைபதைத்து  கோபம் பொங்கிய கிருஷ்ணர், தேரில் இருந்து குதிக்கிறார். பீமனின் கதையில் அடிபட்டு நொறுங்கியிருந்த ஒரு தேரின் சக்கரத்தை கையிலெடுத்து பீஷ்மரை அடிக்க செல்கிறார். பீஷ்மரோ, "ஆஹா பஹவான் கையால் மோக்ஷமா? என்ன புண்யம் செய்தேன்" என்று, வில்லம்புகளை உதறி நிற்கிறார் (கைகூப்பினால் கிருஷ்ணன் கொல்ல மாட்டானே) . மயக்கம் தெளிந்த அர்ஜுனன், "கிருஷ்ணா, ஆயுதமேந்தமாட்டாய் என சத்தியம் செய்துள்ளாய், சத்தியத்தை மீறி பிதாமகரைக் கொல்லாதே" என பகவானின் காலைப் பிடித்துக் கொள்கிறான். பகவானும் திரும்புகிறார்; பீஷ்மரின் சபதமும் நிறைவேறியது.

ரதாங்கம்  = ரதம் + அங்கம் = தேர் + பகுதி .  தேரின் பகுதியான சக்கரத்தை கையிலெடுத்து, ஆபத்தில் இருக்கும் பக்தனை ரக்ஷித்ததை கண்ணெதிரில் கண்ட  பீஷ்மர்,  மகாவிஷ்ணுவை ரதாங்கபாணி ரக்ஷோப்ய என்று துதிக்கிறார். 

வராக அவதாரத்தில் கொம்பு போல் வளர்ந்திருக்கும் பல்லை ஆயுதமாய்  பயன்படுத்தி பூமாதேவியை மீட்டவன். கூர்மாவதாரத்தில் ஆமையாக ஓட்டையும், தேவர்களுக்கு மட்டுமே அமிர்தம் கொடுக்க மோகினியாய் வந்து அழகையும் ஆயுதமாய் பயன்படுத்தியவன். நரசிம்ஹ அவதாரத்தில் நகத்தையே  ஆயுதமாக்கி பிரஹலாதனை ரட்சிக்க வந்தவன். வாமன அவதாரத்தில் தர்ப்பை புல்லை கமண்டலத்தில் நுழைத்து ஆயுதமாய் பயன்படுத்திய வல்லவன். . இராமாவதாரத்தில் வில்லையும், பலராமனாய் ஏரையும் , பரசுராமனாய் கோடாரியையும், கிருஷ்ணனாய் சக்கரத்தையும் ஆயுதமாய்ப் பயன்படுத்த தெரிந்தவன். சர்வத்தையும் ஆயுதாமாய்ப் பயன்படுத்த தெரிந்த அவனையல்லாமல் வேறு யாரை "சர்வப் பிரஹரன ஆயுதஹ " என்று துதிக்க முடியும்?

பக்தனுக்கு ஆபத்து என்றால், நாள் நேரம் பார்க்க மாட்டார்.. கொடுத்த சத்தியத்தைக்கூட விட்டுவிட்டு காப்பாற்ற வருவார் பகவான் கிருஷ்ணர்.  அவர் பிறந்த கோகுலாஷ்டமி இன்று தாமரை மொட்டுப் போன்ற அவர் பாதங்களை வணங்குவோம்.

 ரதாங்கபாணி ரக்ஷோப்ய ; சர்வப் பிரஹரன ஆயுதஹ ;

-- கார்கில் ஜெய்.

Tuesday, March 19, 2013

இளையராஜாவே சிறந்த ஹிந்து...

ஆன்மிகம் 
சைவ உணவு 
அடக்கமும், எளிமையும்
ஆழ்ந்த அறிவு
He is the perfect blend of all above... My prostrations on his feet.. People say he is SC!!
=======
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க.. நேந்துகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குறை தீத்தா
கிடைச்சது மாலையும் மஞ்சளும்தான்..

இந்த சாதாரண வரிகளை மனதை உருக்கும் இசையாக்க முடியுமா? இளையராஜாவால் முடியும்:
I could not believe the sentences can be sing as sweet song. But Raja made it melodious :

Sunday, February 10, 2013

அமாவசை அன்று மறைந்தது நிலவு மட்டுமல்ல.
நேற்று  அதிகாலை 5 மணி அளவில் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், அன்னை ஸ்ரீதேவி உபாசகருமான நண்பர் திரு மலர்மன்னன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடனும் ஆற்றொணா துயரத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 


அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


எனக்கு குருவைப் போன்றவர் .. ஆச்சர்யமூட்டும் மேலாண்மையும் அன்பும் கொண்டவர் ... எழுதிய முறையில், கொள்கையில் வாழ்ந்த ஆச்சார்யர்.... பாரதம் முழுதும் பயணம் செய்து பல பிரச்னைகளுக்காக ஏழைகள், பழங்குடி மக்களுக்காக, பாதிக்கப் பட்டவர்களுக்காக குரல் கொடுத்தவர், இஸ்லாமிய வெறியர்களின் ஆசிட் வீச்சால் இவர் கால் வெந்த பொது, சற்றும் துவளாமல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நலப்பணி செய்ய ஆரம்பித்தவர்.. காமராஜர், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர்.. அவர் எழுதிய 'கண் விழித்த கானகம்' புத்தகமே அவர் பழங்குடிகளிடம் கொண்டிருந்த தொடர்புக்கு ஆதாரம். அதற்கு நான் எழுதிய விமர்சனம் இதோ :http://www.tamilhindu.com/2009/02/birsa-munda-book-review/