Tuesday, November 29, 2016

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய பிரச்னோத்தர ரத்தினமாலை
====================================
1.பகவானே ,கொள்ள வேண்டியது எது ?
குரு சொல்லும் வசனம் 
2.தள்ள வேண்டியது எது ?
வீண் செயல் 
3.குரு யார் ?
உண்மை அறிஞன் ,தத்துவ ஞானி ,தன்னை அடைந்த மாணவனின் நன்மைக்காக ஓயாமல் பாடுபடுகிறவன் .
4.மிகவும் இனியது எது ?
தருமம் 
5.எவன் சுத்தம் உள்ளவன் ?
மனச்சுத்தம் உள்ளவன் .
6.எவன் பண்டிதன் ?
விவேகி .
7.எது நஞ்சு ?
குரு மொழியை அலட்சியம் செய்தல் 
8.மனிதர் வேண்டத்தக்கது எது ?
தனக்கும் பிறருக்கும் நன்மை .அதற்கே பிறவி .
9.எதிரி யார் ?
முயற்சி இல்லாச் சோம்பல் .
10.முழுக் குருடன் யார் ?
ஆசை வலைப்பட்டவன் .
11.சூரன் யார் ?
பெண்களிடம் மயங்காத வைராக்கியம் உடையவன் .
12.செவிக்கு அமுதம் எது ?
சாதுவின் உபதேசம் .
13.பெருமை எதனால் ?
எதையும் பிறரிடம் வேண்டாமையினால் .
14.தாழ்வு எது ?
தாழ்ந்தவனிடம் யாசிப்பது .
15.எது வாழ்வு ?
குற்றமின்மை .
16.எது மடமை ?
கற்றும் ,கற்ற வழியில் நில்லாமை .
17.நரகம் எது ?
பிறர் வசம் இருப்பது .
18.செய்யத்தக்கது எது ?
உயிருக்கு இனிமை .
19.அனர்த்தம் விளைவிப்பது எது ?
அகம்பாவம் .
20.சாகும் வரை மனதைக் குடைவது எது ?
மறைவில் செய்த பாவம் .
21.முயற்சி எதன் பால் ?
கல்வி ,ஈகை ,நல்ல மருந்து --இவற்றின் பால் .
22.எதிலிருந்து விலகுவது ?
தீயர் ,பிறர் மனைவி ,பிறர் பொருள் .
23.விருப்புடன் எதைச் செய்வது ?
தீனாரிடம் கருணை ,நல்லவரிடம் நட்பு .
24.உயிரைக்கொடுத்தாலும் திருத்த முடியாதவர் யார் ?
,மூர்க்கர், சந்தேகப்பேர்வழிகள் ,தாமசர் ,நன்றி கெட்டவர் .
25.சாது யார் ?
ஒழுக்கமுள்ளவன் .
தீ நடத்தையுள்ளவன் .
26.உலகை வெல்பவன் யார் ?
உண்மையும் பொறுமையும் கொண்டவன் .
27.உயிர்க்கூட்டம் யாருக்கு வசமாகும் ?
உண்மையை இனிமையாக பேசுபவனுக்கு .
28.குருடன் யார் ?
காரியமில்லாதவன் ,தகாததை செய்பவன் .
29.செவிடன் யார் ?
நல்லுரை கேளாதவன் .
30.ஊமை யார் ?
தக்க காலத்தில் இன்சொல் பேசத்தெரியாதவன் .
31.ஈகை எது ?
கேளாது கொடுத்தல் .
32.நண்பன் யார் ?
தீமை புகாது தடுப்பவன் .
33.கவனமாக வாழ்வது எப்படி ?
இன்சொல் ,ஈகை ,அறிவு ,செருக்கின்மை ,பொறுமை ,சௌகரியம் ,தியாகத்துடன் கூடிய செல்வன் ஆதலே .
34.அறிவுடையார் யாரை வணங்குவர் ?
இயல்பாகவே அடக்கமுடையவரை .
35-உலகம் யாருக்கு வசப்படும் ?
தருமசீலராய் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
36.விபத்து யாரைத் தீண்டாது ?
அடக்கத்துடன் பெரியோர் சொல் கேட்டு நடப்பவரை .
37.சரஸ்வதி யாரை விரும்புவாள் ?
சுறுசுறுப்பான மூளை ,நீதி நெறி --இரண்டும் உடையவரை .
38.லட்சுமி யாரை விட்டு விலகுவாள் ?
அந்தணர் ,குரு ,தேவர் ---இவர்களை தூற்றித் திரிபவரை .
39.கவலை இல்லாதவன் யார் ?
பணிவுள்ள மனைவியும் ,நிலையான செல்வத்தையும் உடையவன் .
40.மனிதர் சம்பாதிக்கத் தக்கவை எவை ?
கல்வி ,செல்வம் ,புகழ் ,புண்ணியம் .
41.எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது எது ?
கருமித்தனம் .
42.பெரிய தீட்டு எது ?
கடன் தொல்லை .
43.கடவுளுக்கு பிரியமானவர் யார் ?
தானும் மனத்துயர் இன்றிப் பிறர் மனத்தையும் புண் படுத்தாதவர் .
44.நம்பத்தகாதவன் யார் ?
சதா பொய் சொல்லுபவன் .
45.பொய் எப்போது தீதில்லை ?
தருமப் பாதுகாப்பின் போது .
46.உடலெடுத்தவருக்கு எது பாக்கியம் ?
ஆரோக்கியம் .
47.யார் தூய்மையானவன் ?
எவனுடைய மனத்தில் களங்கம் இல்லையோ ,பொறாமை இல்லையோ அவனே தூய்மையானவன் .
48.தாமரை இலையில் தண்ணீர் நிற்காதது போல வாழ்க்கையில் நிலையில்லாமல் இருப்பவை எவை ?
இளமை ,செல்வம் ,ஆயுள் .
49.சாதிக்க வேண்டியது எது ?
என்ன நேர்ந்தாலும் மற்றவர்களுக்கு எப்போதும் நன்மையே நாம் செய்ய வேண்டும் .
50.துக்கம் இல்லாதவன் யார் /
கோபம் இல்லாதவன் .
51.அந்தணன் உபாசிப்பது எவரை /
காயத்திரி ,சூரியன் ,அக்னி ,சம்பு .
52.இவற்றில் உள்ளது என்ன ?
சுத்த சிவ தத்துவம் .
53.யார் பிரத்தியட்ச தேவதை ?
மாதா .
54.பூஜ்ய குரு யார் ?
தந்தை .
55.சர்வதேவதாத்மா யார் ?
வேதவித்தையும் நல்ல கர்மானுஷ்டானமும் கொண்ட விப்ரன் .
56.எதனால் குலம் அழியும் ?
சாது ஜனங்களை புண்படுத்துவதால் .
57.யார் வாக்கு பலிக்கும் ?
சத்திய ,மௌன ,சம வீலர் வாக்கு.

Tuesday, January 5, 2016

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?

காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து  
ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.


1. சித்திரை மாஸம்
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது

2. வைகாசி மாஸம்
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

3. ஆனி மாஸம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
4. ஆடி மாஸம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
5. ஆவணி மாஸம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
6. புரட்டாசி மாஸம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.
7. ஐப்பசி மாஸம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
8. கார்த்திகை மாஸம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
9. மார்கழி மாஸம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
10. தை மாஸம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
11. மாசி மாஸம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
12. பங்குனி மாஸம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.