Thursday, August 12, 2010

NONE was raped in Kandhamaal

http://www.orissadiary.com/CurrentNews.asp?id=20245

Though earlier the Nun claimed she was raped causing the PM Manmohan Singh to apologize to International christians, now she says she was slapped by two youths, who she identified and said they pulled her by holding saree and that is all about.

Christians missionaries killed the swami Lakshmanaananda and tried to create scenes using the death of swamiji causing communal violence and agitations of christains in several parts of the country.

Manmohan singh said he feels ashamed of the happenings in Kandhamaal especially when the nun was raped. However, he did not feel anything when the reformer, the swamiji who helped thousands of aborigin, backward people was killed.

கருணாநிதிக்கு அறிவுரை


==============================================
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0907/20/1090720005_1.htm

ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக் கொண்டிருப்பவன்
எ‌ன்று‌ம் இனியும் விமர்சிக்க இருப்பவன் என்று‌ம் முதலமை‌ச்ச‌ர்
கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கன்னடத்தில் எழுதிய,
‘‘ஸ்ரீ ராமாயணப் பெருந்தேடல்’’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலின்
வெளியீட்டு விழா சென்னையில் நே‌ற்று மாலை நடைபெ‌ற்றது. முதல் பிரதியை
முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வெளியிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்
கொண்டார்.


விழாவில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், ராமாயண நூல் வெளியீடா?
அதிலே கருணாநிதி பங்கேற்பதா? என்று பலர் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
ஆமாம், ராமாயண நூல் வெளியீடுதான், அதில் கருணாநிதி பங்கேற்றது
மாத்திரமல்ல, அதை வெளியிட்டும் உரையாற்றியிருக்கிறார் என்பதுதான் இன்றைய
செய்தி. இதில் ஒன்றும் முரண்பாடில்லை.


நான், ராமாயணத்தை இளமை காலம் முதல் இன்று வரை விமர்சித்துக்
கொண்டிருப்பவன். இனியும் விமர்சிக்க இருப்பவன். புத்தகத்தின் பெயர்,
ராமாயணப் பெருந்தேடல். தேடல்கள் என்றால், கண்டுபிடிக்க முடியாமல் இந்த
நூலிலே புதைந்து கிடக்கிற கருத்துக்களை தேடி எடுத்து மக்களுக்கு
உணர்த்துகிற அந்தப் பணியை இந்த நூலின் மூலம் வீரப்ப மொய்லி செய்துள்ளார்.


இந்த முதல் பாகத்தில் ராமாயணக் கதையின் தொடக்கத்தில் இருந்து கானகம்
சென்றுள்ள ராமனின் பாதுகையை பெற்று பரதன் நாடு திரும்பியது வரை
எடுத்துரைக்கப்படுகிறது. அதைத்தான் அவ்வை நடராஜன் பேசும்போது,
‘‘எங்களுடைய கலைஞர் பரதாயணம் எழுதியவர்’’ என்று குறிப்பிட்டார். ராமன்
காட்டில் கடும் வெயிலில் துன்பப்படுகின்ற நேரத்தில் அவன் பாதுகையையும்
பிடுங்கி கொண்டு வந்து விட்டான் என்று பரதனை குறை கூறி நான் எழுதிய அந்த
புத்தகத்தின் பெயர்தான் பரதாயணம்.


வீரப்ப மொய்லியின் சிந்தனைகள் இந்த நூலில் எப்படி இழையோடி புரட்சி
எரிமலையாக வெடித்து சிதறியிருக்கின்றன என்பதை பல பாடல்கள் வாயிலாக
என்னால் உணர முடிகிறது. என்னுடைய பால பருவத்தில் நான் தீவிரமான
பகுத்தறிவுவாதி. இப்போதும் அது தொடர்கிறது. தொடர்ந்து கொண்டே இருக்கும்.


ராமாயணம் ஒரே கதை என்று சொல்லப்பட்டாலும் சில குறிப்பிட்ட அம்சங்களை
ஒவ்வொரு நூல் ஆசிரியர்களும் வேறுபாடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
குறிப்பாக வால்மீகி ராமாயணத்தைத் தொடர்ந்து தமிழிலே எழுதிய கம்பர், தனது
கம்ப ராமாயணத்தில் கவுதம முனிவரின் மனைவி அகலிகையைப் பற்றிக் கூறும்போது,
இந்திரன், அகலிகையின் அழகில் மயங்கி, கவுதம முனிவராக உருமாறிச் சென்று
வஞ்சகமான முறையில் அகலிகையை கூடுகிறான் என்றும்; இதனை அறிந்த கவுதம
முனிவர் அகலிகையைக் கல்லாகச் சபிக்கிறார் என்றும் அந்தக் கதை முடிகிறது.


அப்போது கல்லாக மாறிய அகலிகை, ராமன் காட்டுக்கு வந்த போது அவன் கால்
பட்டு மீண்டும் தனது உருவை அடைந்து கவுதம முனிவரோடு சேர்ந்து வாழ்ந்தாள்
என்றும் கூறியுள்ளார்.


இது வீரப்ப மொய்லியால் தாங்கிக் கொள்ளக் கூடிய சம்பவமாக இல்லை. ஒரு பெண்
எந்த அளவிற்கு இழிவுபடுத்தப்படுகிறாள் என்ற ஆத்திரம் பீறிடுகின்ற
காரணத்தால், அவர் இதை மாற்றி எழுதுகிறார். இதிலே குற்றவாளி அகலிகையா,
தேவேந்திரனா என்று கேட்டு, இந்திரன்தான் குற்றவாளி என்று ஆண்
வர்க்கத்தைச் சாடுகிறார் வீரப்ப மொய்லி. ஒரு நீதியை பெண்ணுக்கு
வழங்குகிறார். அந்தப் பெண் கையறு நிலையிலே இந்திரனிடம் தவறு இழைக்க
வேண்டிய அவசியத்திற்கு ஆளானாள் என்று இவர் எழுதுகிறார்.


வால்மீகி ராமாயணத்தில் வந்த அகலிகை வேறு, கம்ப ராமாயணத்தில் காட்டுகின்ற
அகலிகை வேறு, ராஜாஜி எழுதிய ராமாயணத்திலே காட்டப்படுகின்ற அகலிகை வேறு,
இவர்கள் எல்லாம் தவறு இழைத்த அகலிகை, ஆனால் நான் இதோ காட்டுகின்ற அகலிகை
தவறு இழைக்குமாறு செய்யப்பட்ட பெண் என்று இந்திரன் மீது கடும் கோபத்தைக்
காட்டுகிறார். அகலிகை தவறு செய்ய தூண்டப்பட்டு சபிக்கப்பட்டவள் என்றார்
துளசிதாசர். கவுதம முனிவர் வேடம் போட்டு வந்தவர் இந்திரன் தான் என்பதை
பிறகு உணர்ந்தும் கூட அகலிகை அதற்கு சம்மதித்தாள் என்பது கம்ப ராமாயணம்.
கம்ப ராமாயண பக்தர்கள் யாராவது இருந்தால் என் மீது கோபித்துக் கொள்ளக்
கூடாது. உள்ளதைத்தான் சொல்கிறேன்.



ஏன் இவற்றை சொல்கிறேன் என்றால் இளமையிலேயே ஊறிய பகுத்தறிவு, அதன் காரணமாக
எழுகிற கேள்விகள் அந்தக் கேள்விகள் ராமாயணத்தைப் பற்றியும்
வந்திருக்குமேயானால் வீரப்ப மொய்லி பொறுத்துக் கொள்ள வேண்டும். “இந்த
நூலில் பெண்ணுரிமை கருத்துகளை, ஏழை எளிய மக்கள் வாழ்வில் இருக்கும்
கஷ்டங்களை எரிமலை போல அவர் வர்ணித்துள்ளார். அதற்காக நான் அவரை
பாராட்டுகிறேன்'' முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பேசினார்.

=============================================================================
திரு கருணாநிதி ,
0)அகலிகைகள் கல்லாக மாற, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின்மேல் கண்வைக்கும் உங்கள் போன்றோர் தானே காரணம் ?

1) அகலிகை பற்றி வருத்தப்படும் அளவுக்கு நீங்கள் பெண்களின் மேல் கண்ணியமான பார்வையோ மதிப்போ உள்ளவரா ? எதிர்க்கட்சி செயலரும் முன்னால் முதல்வரையும் கூட 'முன்னாள் நடிகை' என்று குறிப்பிட்டு அநாகரீகமான சிந்தனைகளை வெளியிட்டவர் நீங்கள்.

2) இராமாயணத்தை சொல்லிகொடுத்தால், தந்தையை மதித்து காட்டுக்கும் செல்லவேண்டும் என்பதும், அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுத்தலையும், தியாகத்தையும் புரிந்துணர முடியும். ஆனால் நீங்கள் இராமாயணத்தை உங்கள் மனைவிகளின் மகன்களுக்கு சொல்லிக் கொடுத்தபோது 'காட்டுக்கு சென்ற ராமனிடம் பரதன் செருப்பையும் ஏமாற்றி வாங்கி வந்துவிட்டான்.. தம்பியை நம்பாதே ' ('செருப்பு' சிந்தனை) என்று திராவிட முறைப்படி விளக்கி இருக்கிறீர்கள். விளைவு: ஒரு மனைவியின் மகனான ஸ்டாலின் (தம்பி)ஏமாற்றிவிடுவான் என்ற ஆத்திரத்தில் இன்னொரு மனைவியின் மகன், (அண்ணன்) காண்டாமிருக நெஞ்சன் அழகிரி தினகரன் அலுவலகத்தில் புகுந்து இளம் பொறியாளர்களைக் கொலை செய்யும் அளவுக்கு வெறி பிடித்து அலைகின்றனர். ராமன் விட்டுக்கொடுத்தான். அழகிரி கொலை செய்கிறான். கொலைகாரனை உருவாக்கி இதில்என்ன பெருமை?

இராமாயணத்தில் புத்திர சோகத்தை தசரதன் எதிர்கொள்கிறான் உயிர்விடுகிறான். காரணம் : எதிர்பாராத விபத்தாக, நீர் கொள்ளச் சென்ற சிராவணனின் மேல் அம்பெய்ததுதான்.

அனால் உங்கள் இரத்த சம்பந்தம் பலரை ரத்தம் சிந்த வைக்கிறதே, அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு நீதிபதி "சன் டிவில காமிச்சதேல்லாம் பொய்.. ஏசி ஷார்ட் சர்க்யூட் னால்தான் தீ விபத்து நடந்து செத்துட்டாங்க" என்று அழகிரியை விடுதலை செய்திருக்கிறார்.

விபத்துக்கு தண்டனை அனுபவிக்கச் சொன்ன இராமாயணம் எங்கே? கொலையை விபத்துதான் என எழுதும் நீங்கள் எங்கே ?

கொலை, காம வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றை விட்டுவிடுங்களேன்? ஒவ்வொரு கிறிஸ்தவனையும், இஸ்லாமியனையும், ஹிந்துவையும் சகோதர பாசத்தோடு நல்ல தமிழனாக உருவாக்க முடியும். ஆனால் இன வெறியைத்தூண்டி கொலைகாரானக்குவது உங்கள் 'செருப்பு' சிந்தனைகள் தான். உங்கள் பண வெறிதான் அப்துல் கலாமாக மலரவேண்டிய இஸ்லாமியன் மதாநியாக மாறுவதருக்கு காரனாக உள்ளது. சற்றே நேர்மையுடன் நடக்கலாமே?


--
Jay

Wednesday, July 28, 2010

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை கோரி


மதசார்பற்ற அரசு மத சார்பற்ற அரசியல் மதசார்பற்ற நாடு என்று நமது அரசியல் வாதிகளால் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டிருக்கின்ற இந்நாட்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதல் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி வரை பல ஆயிரக்கணக்கில் நிதிஉதவி செய்யப்படுகிறது.

ஆனால் ஹிந்து மாணவர்களுக்கு எதுவும் கிடையாது. நாட்டில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒன்றும் கிடையாது. சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்று பிரதமரே சொல்கிறார். இந்நிலையில் ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி நிதி வழங்கிடவேண்டும் என்று பா ஜ க போராடி வருகிறது. கடந்த 20௦ நாட்களாக தமிழகம் எங்கும் மாவட்ட வாரியாக பா ஜ க ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆர்பாட்டம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மாணவர்கள் பெண்கள் என் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 25 ஆம் தேதியன்றும் கன்யாகுமரி மாவட்ட ஆர்பாட்டம் நாகர்கோவிலில் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. சுமார் ஒரு லக்ஷம் பேர் பங்கு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஆர்பாட்டத்தினைப் பற்றி நமது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. எதோ பெயரளவிற்கு ஒரு மூலையில் சிறிய செய்தியை பிரசுரம் செய்தும் தொலைக் காட்சிகளில் சில வினாடிகள் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.

Tuesday, July 13, 2010

தி கராத்தே கிட் (The Karate Kid) - திரை விமர்சனம்


1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ' தி கராத்தே கிட்' திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ' தி கராத்தே கிட்' . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர்


டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் 'ட்ரே பார்க்கரி'ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை வாய்ப்புக்கள் சீனாவுக்கு இடம்பெயர, பிழைப்புக்காக மகனுடன் பெய்ஜிங்கில் குடியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். முற்றிலும் அமெரிக்க பழக்க வழக்ககங்கொண்ட சிறுவன் ட்ரே பார்க்கர் பெய்ஜிங் சூழலில், மஞ்சள் கலாச்சாரத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் திரைக்கதைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கதை தொடங்குகிறது.


ட்ரே வீதியில் விளையாடச் செல்லும்போது, வயலின் பயிற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு சீனச் சிறுமியைச் சந்தித்துப் பேசுகிறான். ட்ரேவின் கேசத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆப்பிரிக்க மணப்பின்னல் அலங்காரத்தை அவள் ஆர்வத்துடன் தொட்டுப் பார்க்கிறாள். இது அவள் மேல் பற்று கொண்டிருக்கும், தெருவின் ரவுடிப்பையன் 'செங்'கிற்கு ஆத்திரமூட்ட, செங் ட்ரேவைக் நையப் புடைக்கிறான். அத்தோடு நில்லாமல் பள்ளியிலும் செங்கின் அடாவடிகள் தொடர பரிதவித்துப் போகிறான் ட்ரே. பெய்ஜிங்கின் மிகப்பெரிய குங்ஃபு பள்ளியில் செங் பயிற்சி பெறுவதை அறிந்து கொள்கிறான் ட்ரே. அதிர்ஷ்டவசமாக, ட்ரே தங்கியிருக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்பின் மராமத்துப் பணியாளராக இருக்கும் திருவாளர் ஹான் (ஜாக்கி சான்), ட்ரேவுக்குக் குங்ஃபு கற்றுக் கொடுக்க சம்மதிக்கிறார். செங் கற்றுக்கொள்ளும் குங் ஃபு பள்ளியின் மாஸ்டரும், திரு. ஹானும் , சீன சிறுவர் குங்ஃபு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவர்கள் இருவரும் மோதுவார்கள் எனவும் அதுவரை ட்ரேவுக்கு மற்ற சிறுவர்கள் எந்த தொந்திரவும் தரலாகாது எனவும் ஒப்புக்கொள்கின்றனர்.(1984 ம் வருடத்திய கராத்தே கிட்டிலும் இது உண்டு.) ஹானின் கடுமையான பயிற்சியின் விளைவாக திறம்பெறும் ட்ரே, சீன குங்ஃபு சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் செங்கை சந்திப்பது கதையை முடிவுக்கு இட்டுச் செல்கிறது.


இந்தப் படத்தின் பலமாக அமைவது பெய்ஜிங்கின் தொழில் வளர்ச்சி, சீனப் பெருஞ்சுவரின் கம்பீரம், பசுமை மிகுந்த மலைகள் ஆகியவற்றைக் காண்பிக்கும் காமெரா படத்தொகுப்பு. குறிப்பாக, குங்ஃபு பயிற்சிக்கு எழில் மிகுந்த மிக நேர்த்தியான இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் இரயில் பயணக் காட்சிகள், மலைக்கோட்டையின் பழங்காலக் கட்டிட அமைப்பு, பிரம்மாண்டம் ஆகியவற்றை ஒரு சுற்றுலா போலக் காண்பித்திருப்பது கொடுத்த பணத்துக்கு இதமாக இருக்கிறது. கடைசி நாள் குங்ஃபு பயிற்சியை நிழல் ரூபத்தில் காண்பிப்பதும் அருமை. படத்தின் மற்ற இரண்டு பலங்கள் ஜாக்கி சானும், நகைச்சுவையும். ஐம்பத்தாறு வயதாகும் ஜாக்கி சான் திரைப் படத்தில் வரும் காட்சிகள் சற்று குறைவென்றாலும் அவருக்கே உரிய வேகமும், வாடிக்கையான ஹாஸ்யமும் சேர்த்து அசத்துகிறார். படம் நெடுக அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் இயல்பான நகைச்சுவை காட்சிகள் படத்தை தொய்வில்லாமல் தொய்வில்லாமல் கொண்டு செல்கின்றன.


ஆனால் முதிர்ச்சியுள்ள ரசிகர்கள் படத்தில் வரும் ஓட்டைகளை எளிதாகக் காணலாம். சாதாரண ரசிகர்களுக்கு, படத்தில் உள்ள குங்ஃபு பயிற்சிக் காட்சிகளில் நல்ல ஆழமும், கடுமையும் த்ரில்லிங்காக அமையும் என்றாலும் உண்மையான குங்ஃபு அல்லது கராத்தே டெக்னிக் என்பது ஒரு மருந்துக்குக் கூட கிடையாது. சாம்பியன்ஷிப் போட்டியிலோ சண்டையை விட வெகு வேகமாகக் கேமரா சுழன்று தலைகளையே திரும்பத் திரும்பக் காட்டுகிறது. என்ட்டர் தி டிராகன் , தி ப்ளெட் ஸ்போர்ட் படங்களில் வந்த அதே மாதிரி போட்டி என்றாலும் சண்டையின் ஆழம் ஒரு 10% கூட கிடையாது. இறுதிப் போட்டியின் கடைசிச் சுற்று எதிர்பாராத விதமாக வெறும் அரை நொடியில் முடிகிறது. இதெல்லாம், தற்காப்புக்கலை ஆர்வத்துடன் படம்பார்க்கச் செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றத்தைக் கொடுக்கும். ட்ரே பார்க்கராக நடிக்கும் ஜேடன் ஸ்மித்துக்கு, வில் ஸ்மித் போன்று நடிப்போ சண்டையோ எடுபட இன்னும் சில வருடம் பிடிக்கும். இவ்வளவு ஏன், தலைப் பின்னலும், தளிர் முகமும் கொண்டு 'சிறுமியோ?' என சில சமயம் எண்ண வைக்கும் அளவுக்கு பாத்திரத்துக்கு பொருத்தமில்லாத உருவம். இந்நிலையில் ட்ரேவின் காதலும், சீனக் காதலியின் அரை நிமிட தப்பாட்டமும் அமெரிக்காவில் மட்டுமே ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளத்தக்கவை. செங்கின் வன்மத்துக்கும் போதுமான காரணம் இல்லை.


மொத்தத்தில் அப்பட்டமான குறைகளுடன் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்


படம் முடிகையில் அமெரிக்க ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செயதது(அமெரிக்க சிறுவன் சீனாவில் ஜெயித்துவிட்டானாம்), அவர்கள் இன்னும் அமெரிக்க வீண் பெருமையில், கற்பனையில் லயித்து இருக்கிறார்கள் என்பதையே காட்டியது. பத்திரிகைகள் இப்படத்தைப் பாராட்டியும், குறிப்பாக ஜேடன் ஸ்மித்தின் காதல், சண்டை, நடிப்புத் திறமைகளைப் புகழ்ந்து எழுதி இருப்பதும் இவர்கள் , 'politically correct' ஆக இருக்க விரும்புவதையே காட்டுகிறது.

Sunday, April 11, 2010

பக்தியின் உச்சம்

பிரம்மத்தை தேடிச்செல்லும் ஞான மார்க்கத்தவர்கள், பிராமணர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். பிரம்மத்தையும், அத்வைதத்தையும் அலசும் நீங்கள், ஞானத்தின் உச்சமான ஆதி சங்கரர் 'பக்தி இல்லாத ஞானம் வீண்' என்றதை நினைத்துப் பார்க்கவேண்டும். இம்மாதிரி கடும் பக்தியின் மேன்மையை உணர்வீர்களா?  பிராமணர் அல்லாதோரின் பக்தி ஈடு பிராமணர்களை விட உயர்ந்தது, கட்டுப்பாடற்றது.

Sunday, April 4, 2010

சாணிய மெரிச்சார் சோயப் மாலிக்!!

ரொம்ப நாளாக முட்டாள்தனமான நியூஸ் நிறைய வருகிறது. இருந்தாலும் காமெடி கொஞ்சம் கம்மிதான்.. இந்த சானியா மிர்சா - சோயப் மாலிக் காமெடி டாப் டென்.. ஆனா சிரிப்புக்கு பதிலா அழுகை வருது... என்ன பண்றது.. கொஞ்சம் கிச்சு கிச்சு மூடிட்டாவத் சிரிச்சுடுகோ. இதப் படிச்சா அழுகை வர சான்ஸ் அதிகம் ..
(இப்போது 'வானத்தைப் போல மனம் படிச்ச நல்லவனே ' பாட்டை ஹம் செய்துகொள்ளவும் )
நம்ம சோயப் வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவரு' . நம்ம ஹைதராபாத் ல ஒரு பொண்ணை , நேர்ல கூட பாக்காம பாகிஸ்தான்லேர்ந்து போன் மூலமாகவே (?!?! ) 2002 ல கல்யாணம் பண்ணிட்டாராம்.. .. அந்த பொண்ண 2010 நேர்ல வரைக்கும் பாக்கவேயில்லயாம் !!! ( இப்போ காதல் கோட்டை படத்தில் இருந்து நலம் நலமறிய ஆவல் பாட்டு உங்க காதுல ஆட்டோமாடிக்கா கேக்குதா? ) (சிரிக்காதீங்க.. சோயப் ரொம்ப நல்லவரு )

இப்போ சாணிய மெரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கப் பாக்கும்போது அந்த பொண்ணு கேஸ் போட்டு இருக்காம்.. அது என்ன கேஸ்னு கேக்கறீங்களா? சோயப் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னோ அல்லது தன் கூடத்தான் வாழனும்னோ இல்லீங்கோ.. ஒரே கண்டிஷன் என்னன்னா தன்னை முதல்ல டிவோர்ஸ் பண்ணிட்டு அப்பறம்தான் சோயப் கல்யாணம் பணிக்கனுமாம்.. அதையும் இந்த அம்மாவே தலாக் பண்ண மாட்டாங்களாம்.. சோயப்தான் பண்ணனுமாம். (இப்ப காதல் கோட்டை பட ம்யூசிக்க ஆப் பண்ணிட்டு, புதுப்பேட்டை படத்த போட்டுக்குங்க .. "மணிண்ணா சிரிக்க வேணாம்னு சொல்ண்ணா .. யண்ணா எல்லாம் சிரிக்கராங்ண்ணா" ) .. அதுக்கு சோயப் என்ன சொல்றார் தெரிமா? அதாவது இஸ்லாமிய திருமணச் சட்டப்படி மன்னிக்கணும், நிக்காஹ் ஷரியா படி நாலு பேரை கல்யாணம் பண்ணிக்கறதும் ஹாரம் இல்லையாம்.. இல்ல வேணாம்னா நிக்காஹ் வை தலாக் பண்ணி விட்டுடலாம் அதுவும் ஹாரம் இல்லையாம் .. அதுவும் சட்டப்படி சரியானதே.. சரி.. ரெண்டு கருமத்துல ஏதாவது ஒண்ணை பண்ணித் தொலைக்கவேண்டியது தானேன்னு கேட்டா அதை செய்ய மாட்டாராம்!!.. இந்த கல்யாணம், பொண்ணையே காட்டாம என்ன ஏமாத்தி பண்ணதால இது செல்லாததாச்சே, எப்படி செல்லாத கல்யாணத்துக்கு டிவோர்ஸ் குடுக்கு முடியும்னு கேக்குறார் (இதுக்கு அவரு நம்மள பாத்து 'ஏண்டா சோறு தின்றீங்களா இல்ல வேறு ஏதாவது தின்றீங்களா? நான் பேசறதெல்லாம் நியூஸ்னு கேட்டுட்டு இருக்கீங்களே .. த்த்தூ .. போய் ஜோலி மயித்த பாருங்கடா' என்றே சொல்லி இருக்கலாம்.... ) சரி இப்ப என்னதான் தீர்வுன்னு யோசிக்கறீங்களா? அதற்கு அவர்கிட்டயே சூப்பர் தீர்வு இருக்காம் : இந்தப் பிரச்சினைய சரி செய்யறதுக்காக சாணியா மெரிச்சா கூட கல்யாணத்த ரெண்டு வாரம் முன்கூட்டியே முடிக்க போறாராம்!!!.. ( புதுப்பேட்டை: மணிண்ணா எனுக்கு அழுவை அழுவையா வருது.. நான் அழுவட்டான்?)

Sunday, March 7, 2010

கார்கில் ஜெய்யின் சாமியார் பயிற்சிக் கூடம்

செக்ஸ் பிரச்னை, வீடியோ இவற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?

ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி ஜில்பான்ஸ் செய்து மாட்டிக்கொள்ளும் வாலிப , வயோதிக சாமியார்களே, உங்கள் பிரச்சினை முற்றும் துறந்த சாமியாராக இருப்பது இல்லை, முற்றும் 'திறந்த' சாமியாராக இருப்பதுதான். இந்த அவல நிலைக்கு, வீடியோ பிரச்னைகளுக்கு தீர்வுதான் என்ன? இதோ கார்கில் ஜெய்யின் workshop :


0) கர கர குரலில் தமிழ் பேசவும். யாரவது திராவிடத்தலைவர் என்று நினைத்து எத்தனை மனைவி, பெண்கள் இருந்தாலும் பிரச்சினை ஏதும் வராது. ஒரு முறை அண்ணாத்துரை சொல்லி இருக்கிறார் : “[...நடிகை பெயர் ...] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [....நடிகை பெயர் .....] என்பவள் ஒரு பேனா மைக்கூடு - அதை பேனாவை விட்டு விட்டு யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”

1) பொதுவாக தனி இடத்தில் அல்லது படுக்கை அறையில் பக்தர்களைச் சந்தித்தால் விளக்கை உடனடியாக அனைத்து விடவும். உலக வெப்பமயமாதலையும் தடுத்தற்போல் இருக்கும், வீடியோவால் மாட்டுவதையும் தடுக்கலாம்

2) நம்ம பரமஹம்ச நித்யானந்தரின் 'வீடியோ எடுத்த' சிஷ்யர் முன்பே 'இன்பத்தை அதிகரிக்கும் காந்தப் படுக்கை' என்று கோ ஆப்டேக்ஸ்சில் தள்ளுபடியில் வாங்கிய மெத்தையை பல லட்சம் ரூபாய்க்கு பல தொழில் அதிபர்களிடம் விற்று போலீசில் மாட்டிக்கொண்டவர். இவரின் பூர்வாசிரமப் பெயர் லெனின். இந்த மாதிரி சிஷ்யன் கிடைத்தால் உங்கள் கதி இப்படித்தான் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே நல்ல நம்பிக்கையான சிஷ்யராக தேர்ந்தெடுக்கவும். அபிஷ்டுவாக இருந்தால் நலம். மாலைக்கண் நோயுள்ள அபிஷ்டுவாக இருந்தால் உன்னதம்.

3) நேர்மையான, நல்ல பக்தர்களை விரட்டிவிட்டு தெர்தேடுத்த ஃபிராட்களை பிரதான சீடர்களாக ஏற்றுக்கொள்ளுதல் பொதுவாக சாமியார்களின் இயல்பு. அப்படி சீடர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர்களை லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 'நோ கிரைம்' சர்டிபிகேட் வாங்கி வரச்சொல்லவும்.


4) டுபாக்கூர், பிராடு, மொள்ளமாரி, லெனின் போன்ற சிஷ்யர் இருந்தால், நிறைய பணக்காரர்களிடம் ஆசிரமத்தை மார்கெடிங் செய்யலாம் என்பதனாலும், காந்தப் படுக்கை ஓசியாகவே உங்களுக்கும் கிடைக்கும் என்பதாலும் நீங்களே இந்தமாதிரி சிஷ்யனை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடும். அப்படி இருந்தால்
a) வீடியோ ஜாம்மர் வைத்துக் கொள்ளவும்.

b) பி.சி. ஸ்ரீ ராமே எடுக்க முடியாத அளவு இருட்டாக பெட்ரூமை பார்த்துக் கொள்ளவும்.

c) பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிப்பது போல் தாராளமாக சந்தனம் பூசிக்கொள்ளவும். முகப்பரு, உஷ்ணத்துக்கும் நல்லது, காமேரவிலும் உங்கள் முகம் தெரியாது. கூட இருக்கும் சிஷ்யை மலையாள சிஷ்யையாக இருந்தால் கதக்களி போல் பச்சை, கருப்பு, சிகப்பெல்லாம் கூட பூசிக்கொள்ளலாம்.

d) அவ்வப்போது விபூதி தூவலாம். எதோ கனவுக்கட்சியில் பனிப்புகை பறப்பது போன்ற ஒரு ஸ்பெஷல் எபெக்டும் இருக்கும். கேமராவிடம் இருந்தும் தப்பிக்கலாம். நல்ல பழனி சித்தனாதன் ஜவ்வாது விபூதி கிடைத்தால் திவ்யம் .

5) கொசுவலை மாதிரி பரமஹம்ச தூளிகா மன்னிக்கவும் ஹம்சதூளிகா மஞ்சத்தைச் சுற்றி வேஷ்டி, காவித்துண்டு அல்லது மஞ்சள் நிறத்தில் தமிழர் தலைவரின் துண்டு ஆகியவற்றை வாங்கி மாட்டிவிடவும். இது காமெராவை நன்றாக மறைக்கும். ஆனால் டிவி பார்க்க சௌஹர்யமாக இருக்காது;அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும் .


6) சாமியாரான உங்களுக்கு இளவயதே ஆனாலும் மிகவும் வயதானவர் மாதிரி வெள்ளை நிறத்தில் டை அடித்துக் கொள்ளவும். இதனால் சந்தேகப்படும், மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறையும். அப்படியே மாட்டிக்கொண்டாலும், விளம்பரம் கிடைத்துவிட்டதால், அதையே வைத்து தள்ளாத வயதிலும் தளராத இளமை ரகசியத்துக்கு, என்று சொல்லி எதாவது இமயமலை ரகஸ்ய மூலிகை லேஹியம் அல்லது காயகல்பம் இருப்பதாக சொல்லி ஆசிரமத்தை விட்டாலும், லேகிய அதிபராக மன்னிக்கவும் தொழில் அதிபராகி விடலாம்.

7) மஞ்சள் துண்டும், மூன்று பெண்டாட்டிகளும் வைத்துக்கொள்ளவும். உங்களை முதல்வர் என நினைத்து சன் டிவி, கலைஞ்சர் டிவி ஆகியோர் மதிப்பாக நடத்தக் கூடும்.

8) முற்றும் துறந்த நிர்வாண சாமியார் போல், முற்றும் மூடிய முகமூடி சாமியார் என பெயர் வரும் வகையில் முழுதும் மூடிக்கொள்ளலாம். இது வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பக்தர்களைக் கவரவும் உதவும். வீடியோவில் இருக்கும் முகமூடி நான் அல்ல, என் முகமூடியைச் சுற்றி ஒரு ஒளி தெரியும் என்று சொல்லி தப்பிக்கொள்ளலாம்.

9) உங்கள் பெயர் சுவாமி கிருபேஷ் தாஸ் எனவும் அந்த வீடியோவில் இருப்பது சிறுவயதில் காணமல் போன உங்கள் இரட்டை சகோதரர் அபேஸ் தாஸ் எனவும், உங்கள் கண் அபேஸ் தாஸ் மாதிரி இல்லாமல் டோரைக்கண் என்றும் சொல்லி நடித்துக் காட்டுங்கள். இந்த மாதிரி சீன் களுக்கு எஸ்.வீ. சேகர் மற்றும் பாண்டிய ராஜன் படம் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

10) கூடு விட்டுக் கூடு பாய்ந்து அப்போது வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும், இது ஒரு தாந்த்ரீக யோகப் பயிற்சி என்றும் சொல்லிவிடலாம். இதை சிஷ்யர்களுக்கு அடுத்த பயிற்சியில் சொல்லிக்கொடுப்பதைக் கூறிவிட்டால், ஓஷோ யோகா மையத்தின் சீடர்களும் ஒடி வந்து நம் காலடியில் இருப்பார்கள்.

11) நடிகையை ரம்பா, ஊர்வசி போன்ற மயக்க வந்த அப்சரஸ்களாக எண்ணி கன்பியூஸ் ஆனதாகவும், இந்திரனின் கோவத்துக்கு ஆளாக வேண்டாம் என்று 'யதார்த்தமாக' விட்டுகொடுத்தாகவும் சொல்லிவிடாலாம்.

Monday, March 1, 2010

டாக்டர் பட்டி

டாக்டர் செரியன், வைத்திய ரத்னம் வாரியார் போன்ற வல்லுனர்களை நாம் பார்த்திருக்கிறோம். மலைநாடு தந்த இந்த மாணிக்கங்களின் சேவைகள் சொற்களில் அடங்காதவை. வாரியாரால் வாழ்ந்தது மனிதர்கள் மட்டுமல்ல, ஆயுர்வேதமும் கூட. செரியானால் பல ஆயிரம் நின்று போய் இருக்கவேண்டிய இதயங்கள், துடிப்பைத் தொடர்ந்திருக்கின்றன. ஆனால் தற்போது நான் எழுதப்போவது வேறு ஒரு டாக்டரால் நின்று போன இதயத்தைப் பற்றி.

காட்சி 1 :
அது 2004 நவம்பர் மாதத்தில் ஒரு இயல்பான மதியம். இன்போசிஸ் பெங்களூரில் அப்போது நான் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். இருந்து ஒவ்வொரு வாரயிறுதியிலும் சென்னை வருவது வழக்கம். அந்த சனிக்கிழமை மதியம் என் பைக்கை துடைத்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

'ஃபோன்..டா"
"இதோ வர்ரேமா"

"குட் ஆப்டர்நூன்.. ஜெயகுமார் ஹியர்"
"நமஸ்தே ஜி.. RSS லேர்ந்து போன் பண்றோம், உங்க ப்ளட் குருப் ஒ நெகடிவ் தானே?"
"நமஸ்தே ஜி.. ஆமாம்.. சொல்லுங்க"
"ஒரு போன் நம்பெர்கு போன் பண்ணி கேட்டுகறீங்களா?.. நோட் பண்ணிக்கங்க"

ஒரு பெண்மணி போனை எடுத்தார். அரை குறை ஆங்கிலத்தில், மைசூரில் இருந்து வந்திருபதாகவும், அவரின் தந்தையார் டெங்கு காய்ச்சலில் அவதியுற்று அப்போல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். அவசர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவரிடம் பேசச்சொன்னார்.

"ஹலோ .. அப்போல்லோ ஹாஸ்பிடல்ஸ்? .. குட் யு கன்னெக்ட் மீ டூ Dr ..ப்ளீஸ்?"
"..................."
"குட் ஆப்டர்நூன் சார். மை நேம் இஸ் ஜெயகுமார், மை ப்ளட் குருப் இஸ் ஒ நெகடிவ் அண்ட் ஐ வூட் லைக் டூ.. "

"எஸ் ஜெயகுமார்.. ஹவ் சூன் கேன் யூ கம் ஹியர்?"
"விச் ப்ளேஸ் சார்?"
"கிரீம்ஸ் ரோடு"
"20 மினிட்ஸ் சார்.. வை இஸ் இட் சோ அர்ஜென்ட் சார்?"
"யூ சி, மை பேஷன்ட் இஸ் ஹேவிங் அக்யூட் ப்ளட் வெஸ்ஸல் டிஸ்சார்ஜ் ப்ரம் டெங்கு ஃபிவெர், அண்ட் இன் ஆர்டர் டூ ஸ்டாப் ப்ளீடிங் வாட் ஐ நீட் ஈஸ் ப்யூர் ப்லேட்லெட், ஃபார் டைரக்ட் ஹெமஸ்டோசிஸ். யூ ஹேவ் டு லை நியர் ஹிம், அண்ட் டொனேட் ப்ளட். டைரக்ட்லி யுவர் ப்ளட் வில் பீ சென்ட் டூ தி பேஷன்ட் த்ரூ ப்லேட்லெட் செபெரேடிங் டிவைஸ். யூ டிட் நாட் ட்ரின்க் ஆல்கஹால் ஃபார் லாஸ்ட் த்ரீ டேஸ் ஆர் அதர்வைஸ் ஹெல்தி ரைட்?"

துடைத்து வைத்திருந்த பைக்கை உதைத்தேன். அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் சாலையில் திரும்பி ஒரு கீமீ கடந்து இடது பக்கம் திரும்பினால் அப்போல்லோ மருத்துவமனை.

காட்சி 2 :

டிங்க்சர் வாசம், பிரம்மாண்டம், கவலை தோய்ந்த முகங்கள், பீதியில் கலங்கிய மனைவி, ஸ்ட்ரெச்சரில் ஆடிய சலைன் அனைத்தையும் கடந்து ரிசப்ஷனுக்கு சென்றேன். அங்கிருந்த பெண், நான் வேண்டிய மருத்துவரை பார்க்க முடியாது என்றும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது என்றும் சொன்னார். நான் அரை மணி நேரம் முன்பு பேசியதையும், அவரைப் பார்க்க வேண்டிய அவசியத்தையும், அவசரத்தையும் சொன்னேன்.

" சார் ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.. யூ கேன்னாட் ஸீ ஹிம். ப்ளீஸ் காண்டக்ட் ப்ளட் பேங்க்".
"ஹவ் கேன் ஐ கோ தேர்?"

இரத்த வங்கியில் வேறு ஒரு டாக்டர் இருந்தார். அவர் பெயர் "ஜார்ஜ் வர்கீஸ்" என்பது போல ஏதோ ஒரு பெயர். "சீஃப் ஆபீசர், ப்ளட் பேங்க்" என்று அவர் பெயருக்கு கீழே எழுதி இருந்ததாக நினைவு . இரத்த வங்கியை கவனிப்பது மட்டுமே அவரது பணி.


"எக்ஸ்க்யூஸ் மீ சார். டூ டைரேக்ட்லி ட்ரான்ஸ்ஃபியூஸ் ப்லேட்லெட் இன்டூ டெங்கு ஃபீவர் பேஷன்ட், டாக்டர் .... ஆஸ்க்டு மீ டூ கம் ஹியர்"
"ஏய்.. ஐ யெம் தி டாக்டர் ஹியர்.. வாட் டூ யூ வான்ட்?"
"நோ.. ஆக்சுவல்லி ஐ கேம் ஹியர் டு டொனேட் ப்ளட் .. பட் Dr .... டோல்ட் மீ டு டைரகட்லி"..
" யூ கேன்னாட் கோ தேர் அண்டு ஆல்.. இஃப் யூ வான்ட்... கிவ் ஹியர்.. இப் யூ டோண்டு வான்ட், கோ"
" சார் ஐ வான்ட் டு டொனேட்.. பட் டைரேக்ட் ப்லேட்லெட் பார் எமர்ஜென்சி பேஷன்ட் "
"ஏய், ஞான் சொன்ன கேக்க மாட்டாயோ?.. டைரேக்ட் ப்லேட்லெட்நு எதுவுமில்லா.. ஞான் சைன் பண்ணினாதான் யார் ப்ளட்டும் அகத்துலே போகும்.. மனசில ஆயோ? "
சற்று தடுமாறி யோசித்தேன்.. " ஷுட் ஐ கிவ் ஒன்லி ஹியர் ?"

" ஐ நோ தட் டெங்கு பிவெர் பேஷன்ட் வெரி வெல் .. டோன்ட் வேஸ்ட் டைம்.. டொனேட் ஹியர் அண்ட் கோ"

இரத்த தானம் செய்து முடித்தேன். என் இரத்தம் பதப்படுத்தப்பட்டு லேபிள் ஒட்டி ஒரு பெட்டில் வைக்கப்பட்டது.
"ஏய் உன் பேர் என்ன?" டொனேஷன் கார்டில் ஏதோ எழுதிக்கொண்டே கேட்டார் அவர்.
"ஜெயக்குமார் "
"இனிஷியல் ஏதும் உண்டோ?"
திமிர் கேள்வியில் திடுக்கிட்டுப் போனேன். " ம்.. ஆர்"

கதவைத்திறந்து திடீரென நுழைந்தார் ஒருவர். அவர் சட்டையில் இருந்த பெயர்ததகடு, என்னுடன் போன் செய்து பேசிய டாக்டர் அவர்தான் எனக் காண்பித்தது. ஒரு வினாடி பார்த்துவிட்டு,
" ஆர் யு ஜெயகுமார்? லெட்'ஸ் ஸ்டார்ட்.. மை பேஷன்ட் இஸ் அவைடிங்" என்றார் .
"நான் ஏற்கெனவே ப்ளட் டொனேஷன் பண்ணிட்டன் சார்"..
"யூ ஸ்டுபிட்.. யூ வேர் தி ஒன்லி ஒ நெகடிவ் மேன்.. ஐ டோல்ட் யூ அம்டீந்த் டைம் டூ மீட் மீ அண்ட் நாட் டொனேட் இன் ப்ளட் பேங்க்"
என் குரல் உயர்ந்தது. " ஐ இன்சிஸ்ட்டேட் தி சேம் டூ , பட் ஹி டோல்ட் ஐ கேன்'ட் மீட் யூ அண்ட் மஸ்ட் டொனேட் ஹியர்"
உடனடியாக வார்டு பாய் என்னை வெளியே அழைத்துச் சென்றார்.
ஐந்து நிமிடம் கழித்து வந்த அந்த டாக்டர் "தேன்க் யூ போர் ஹெல்ப். ஹி கரெக்ட்லி சேவுட் அண்ட் யூசுட் யுவர் ப்ளட்.. நோ ப்ரோப்ளேம்.. யூ கேன் கோ." என்றார்.


காட்சி 3 :
டிசம்பர், 2004
என் வீடு. தொலை பேசி ஒலித்தது.

"யெல்லோ.. டாக்டர் ஜோர்ஜ் ஹியர் ப்ரோம் அப்போல்லோ.. ஹியர் யூ வ்ரோட் எ கொம்ப்ளைன்ட் அபௌட் மீ. யூ டிட் நாட் டெல் யுவர் இனிஷியல். தட் இஸ் வை ஐ ஆஸ்க்ட் இனிஷியல். வாட் இஸ் இன்சல்டிங் இன் இட்?"
"யூ டிட் நாட் ஆஸ்க் மை இனிஷியல், பட் யூ ஆஸ்க்ட் இப் ஐ ஹாவ் ஒன். ஒன்லி இப் ஐ டோன்ட் நோ மை பாதர், ஐ வோன்ட் ஹாவ் எனி."
"நோ நோ .. வை யூ டேக் ராங்.. அன்ட் செகான்ட்லி யுவர் ப்ளட் வாஸ் யூஸ்புல் டூ தி பேஷன்ட் .. வீ டிட் நாட் வேஸ்ட் இட் "
"ஐ செக்ட் வித் பேஷன்ட்'ஸ் டாட்டர். ஷி டோல்ட் தி பேஷன்ட் பாஸ்ஸுடு அவே சேம் நைட்... ஐ ஆஸ்க்ட் ஹேர் டு பைல் எ கேஸ் அகைன்ச்ட் யூ.. பட் ஷி டிட் நாட் அண்டர்ஸ்டாண்ட் இங்கிலீஷ்"

"யூ ஸீ.. வை யூ டேக் ராங்? வீ ஆர் பிரெண்ட்ஸ்.. ப்ளீஸ் கம் சம் டே அன்ட் டொனேட் அகைன்.. OK? " -- இதையே கிட்டத்தட்ட பலவிதமாக, பலமுறை கிட்டத்தட்ட நாற்பது நிமிடத்திற்கு சொல்லிக்கொண்டிருந்தார் அந்த டாக்டர் ஜோர்ஜ்.. மன்னிக்கவும்.. பட்டி ஜோர்ஜ்

[P.S :
0) இந்த வலைப்பதிவை சுட்டி பலர் "கார்கில் ஜெய் ஒரு மொழி துவேஷக்காரர் , தமிழ்நாட்டையே ஜெர்மனி போன்ற பாச்சிஸ்ட் மனநிலைக்கு மாற்ற முயற்சிக்கிறார்.. தமிழ் வெறியைத் தூண்டுகிறார் என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் மொழி வெறியால் மரணத்துக்கு துணை போனது அந்த மலையாள டாக்டரின் 'தான்' என்ற அகம்பாவம் தான். நேர்மாறாக கர்நாடகம் எரிந்தாலும், ஈழம் எரிந்தாலும் தமிழன் வந்தவர்களை வாழவே வைத்திருக்கிறான், அடித்ததில்லை .

1) I forgot both Dr's Name. But anyone can refer the records to Appolo Hospitals for the month of Nov-04 and find both my name and the Dr's name.
2) It is the racism OR negligence or blend of both of the Doctor that caused loss of a life and mental trauma for me. Some may claim that I have unfounded hatred against Malayalees. But I can assure that I have not , will not harm any Malayalee excpet telling them plain truth about them.
----
etc addition 1 )
தினமலர் செய்தி: கோயம்புத்தூர் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதால் பிரயோஜனம் எதுவுமில்லை என்றும், மக்கள் போக்குவரத்து குறைவு என்றும் பொய்யான தகவலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு மலையாள அதிகாரிகள் அளித்துள்ளனர். கோவைக்குப் பதிலாக திருவனந்தபுரம் அல்லது கொச்சியில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து அதிகம் என்றும் தவறான புள்ளிவிவரத்தை அளித்துள்ளனர் திரிசூலம் விமான நிலையத்தில் பனி செய்யும் இந்த மலையாள அதிகாரிகள்.

etc addition 2) I was working in HCL Technologies, Madras, CISCO networking products division in 2000. There was a team called 'technical documentation team' which had 6 non-management members all malayalees. That team was reporting to Mary Koshi who was head of one business unit. So 100% of the members were Malayalees. One of my friend enquired about any possible opening in the team. They answered "hmm.. pass on the resume if he is Malayalee.. then ok".

Saturday, February 27, 2010

சாநி எடுக்கும் ஹாலிவுட் படம் :-)

பெரும் கலகக்கார* எழுதாளர் ஹாலிவுட் படம் எடுக்கப் போகிறாராம்.. அவர் கதையை அமெரிக்க ஆண்டனி ஹாப்கின்ஸ் முதல் ஜப்பானிய ஜாக்கிசான் வரை கேட்டிருப்பதால், கலக எழுத்தாளருக்கே ஹீரோவைத் தேர்வு செய்ய உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறதாம் :-) .. அதனால் கலக எழுத்தாளருக்கு அதிக தொகையில் டிடி அனுப்பும் கலக வாசகருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்குமாம். ஹீரோ கனவு இருக்கும் யாரும் டிடி அனுப்பி முயற்சி செய்யலாமாம். துணியில்லாமல் நடிக்க தைர்யம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமாம். 'நம்பிக்கையாள'ராக இருந்தால் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் அவார்டும் கலக எழுத்தாளரே வாங்கி கொடுத்திடுவாரம்.


* கலகக்கார எழுத்தாளர் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய 'தொறக்க பெர்ரோ' என்னும் புதினம்தான் நைஜீரியா நாட்டில் போன வாரம் நடந்த, கையாலாகாத மன்னர் 'மாமாடோ தஞ்சா'வை மக்கள் பதவியிறக்கிய பெரும்புரட்சிக்கு காரணமாம்.

* இவரின் இக்கதையும் திருடியது என்று மற்ற பின்நவீனத்துவ எழுதுதாளர்கள் நினைப்பது போல் இல்லையாம். தருமி ஸ்டைலில் 'மத்தத விடுங்க. இந்தக்கதை நானேதான் எழுதினேன்.. என்ன? நாகூர்ல 1992 ல யாரவது எழுதின டைரிலேர்ந்து திருடினதுன்ன்னு நினைச்சீங்களா?... சரி சரி
கைல ஏதாவது இருந்தா சைடு டிஷ்கு குடுத்துட்டு போங்க' என்றாராம்.

* தினகரன் கொலைஞர் ஆட்சியை நம் பின்நவீனத்துவ எழுத்தாளரின் புதினங்கள் புரட்சியால் கவிழ்த்துவிடும் என்ற பயத்தில் ஒரு 'சி' இவருக்கு கொடுத்துள்ளார்களாம். இதனால் மார்க்சிய முறையில் அன்புக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்து இருக்கிறாராம்.

குறுகுறுப்பு


அண்ணா கண்ணனே http://annakannan.blogspot.com/ இந்தக் கவிதையைப் பாராட்டினர்.

Sunday, February 7, 2010

மந்திர புஷ்பம் -

நான் பால்யத்தில் அபினவத்தில் இருந்தபோது, எப்போதாவது சமார்த்தனையோ, ராதா கல்யாணமோ அல்லது ஏதாவது ஒரு பூஜையோ நடக்கும். அப்போதெல்லாம் இந்த மந்திர புஷ்பங்கள், ஒதுவோர்களின் சாரீரங்களில் மலரும்போதேல்லாம் ஒரு வசப்பட்டு, வியப்புடன் இதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஏன் காதில் நுழையும் இம்மந்திரங்கள் உடல் முழுதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் ஒவ்வொரு முறையும் மந்திரம் பூர்த்தியான பிறகே நான் உணர்ந்த மாயஜாலம் விலகும். அப்போது எந்த அர்த்தமும் புரிந்ததில்லை. கொடியில் பூவாய், பூவில் தேனாய், தேனில் சுவையாய் என்றுதான் பொதுவாக இலக்கியங்களில் எவரும் படித்திருக்கக் கூடும். அது அழகின் ஆடல். ஆனால் இந்த வேதங்களில் கொடியில் கொடியாய், பூவில் பூவாய் , தேனில் தேனாய், அதன் இனிப்பில் சுவையாய் ஆனது எதுவோ அதைப் பற்றிய சிந்தனை நிகழும். இது ஆன்மாவின் தேடல். மந்திர புஷ்பங்களை நுகர்பவர்கள் நுகர்ந்து கொள்ளட்டும். கேட்டு ரசிப்பவர்கள் ரசிக்கட்டும். தேனை ருசிப்பவர்கள் ருசிக்கட்டும். உள்ளத்தில் உணர்பவர்கள் உயரட்டும்: