மதசார்பற்ற அரசு மத சார்பற்ற அரசியல் மதசார்பற்ற நாடு என்று நமது அரசியல் வாதிகளால் மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்கொண்டிருக்கின்ற இந்நாட்டில் சச்சார் கமிட்டி பரிந்துரையின் பேரில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவர் மாணவியர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதல் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி வரை பல ஆயிரக்கணக்கில் நிதிஉதவி செய்யப்படுகிறது.
ஆனால் ஹிந்து மாணவர்களுக்கு எதுவும் கிடையாது. நாட்டில் பெரும்பான்மை இனத்தவருக்கு ஒன்றும் கிடையாது. சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என்று பிரதமரே சொல்கிறார். இந்நிலையில் ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி நிதி வழங்கிடவேண்டும் என்று பா ஜ க போராடி வருகிறது. கடந்த 20௦ நாட்களாக தமிழகம் எங்கும் மாவட்ட வாரியாக பா ஜ க ஆர்பாட்டம் செய்து வருகிறது. ஆர்பாட்டம் நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் மாணவர்கள் பெண்கள் என் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
கடந்த 25 ஆம் தேதியன்றும் கன்யாகுமரி மாவட்ட ஆர்பாட்டம் நாகர்கோவிலில் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. சுமார் ஒரு லக்ஷம் பேர் பங்கு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஆர்பாட்டத்தினைப் பற்றி நமது ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. எதோ பெயரளவிற்கு ஒரு மூலையில் சிறிய செய்தியை பிரசுரம் செய்தும் தொலைக் காட்சிகளில் சில வினாடிகள் மட்டும் ஒளிபரப்பப்பட்டது.
No comments:
Post a Comment