Sunday, April 11, 2010

பக்தியின் உச்சம்

பிரம்மத்தை தேடிச்செல்லும் ஞான மார்க்கத்தவர்கள், பிராமணர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். பிரம்மத்தையும், அத்வைதத்தையும் அலசும் நீங்கள், ஞானத்தின் உச்சமான ஆதி சங்கரர் 'பக்தி இல்லாத ஞானம் வீண்' என்றதை நினைத்துப் பார்க்கவேண்டும். இம்மாதிரி கடும் பக்தியின் மேன்மையை உணர்வீர்களா?  பிராமணர் அல்லாதோரின் பக்தி ஈடு பிராமணர்களை விட உயர்ந்தது, கட்டுப்பாடற்றது.

Sunday, April 4, 2010

சாணிய மெரிச்சார் சோயப் மாலிக்!!

ரொம்ப நாளாக முட்டாள்தனமான நியூஸ் நிறைய வருகிறது. இருந்தாலும் காமெடி கொஞ்சம் கம்மிதான்.. இந்த சானியா மிர்சா - சோயப் மாலிக் காமெடி டாப் டென்.. ஆனா சிரிப்புக்கு பதிலா அழுகை வருது... என்ன பண்றது.. கொஞ்சம் கிச்சு கிச்சு மூடிட்டாவத் சிரிச்சுடுகோ. இதப் படிச்சா அழுகை வர சான்ஸ் அதிகம் ..
(இப்போது 'வானத்தைப் போல மனம் படிச்ச நல்லவனே ' பாட்டை ஹம் செய்துகொள்ளவும் )
நம்ம சோயப் வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவரு' . நம்ம ஹைதராபாத் ல ஒரு பொண்ணை , நேர்ல கூட பாக்காம பாகிஸ்தான்லேர்ந்து போன் மூலமாகவே (?!?! ) 2002 ல கல்யாணம் பண்ணிட்டாராம்.. .. அந்த பொண்ண 2010 நேர்ல வரைக்கும் பாக்கவேயில்லயாம் !!! ( இப்போ காதல் கோட்டை படத்தில் இருந்து நலம் நலமறிய ஆவல் பாட்டு உங்க காதுல ஆட்டோமாடிக்கா கேக்குதா? ) (சிரிக்காதீங்க.. சோயப் ரொம்ப நல்லவரு )

இப்போ சாணிய மெரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கப் பாக்கும்போது அந்த பொண்ணு கேஸ் போட்டு இருக்காம்.. அது என்ன கேஸ்னு கேக்கறீங்களா? சோயப் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னோ அல்லது தன் கூடத்தான் வாழனும்னோ இல்லீங்கோ.. ஒரே கண்டிஷன் என்னன்னா தன்னை முதல்ல டிவோர்ஸ் பண்ணிட்டு அப்பறம்தான் சோயப் கல்யாணம் பணிக்கனுமாம்.. அதையும் இந்த அம்மாவே தலாக் பண்ண மாட்டாங்களாம்.. சோயப்தான் பண்ணனுமாம். (இப்ப காதல் கோட்டை பட ம்யூசிக்க ஆப் பண்ணிட்டு, புதுப்பேட்டை படத்த போட்டுக்குங்க .. "மணிண்ணா சிரிக்க வேணாம்னு சொல்ண்ணா .. யண்ணா எல்லாம் சிரிக்கராங்ண்ணா" ) .. அதுக்கு சோயப் என்ன சொல்றார் தெரிமா? அதாவது இஸ்லாமிய திருமணச் சட்டப்படி மன்னிக்கணும், நிக்காஹ் ஷரியா படி நாலு பேரை கல்யாணம் பண்ணிக்கறதும் ஹாரம் இல்லையாம்.. இல்ல வேணாம்னா நிக்காஹ் வை தலாக் பண்ணி விட்டுடலாம் அதுவும் ஹாரம் இல்லையாம் .. அதுவும் சட்டப்படி சரியானதே.. சரி.. ரெண்டு கருமத்துல ஏதாவது ஒண்ணை பண்ணித் தொலைக்கவேண்டியது தானேன்னு கேட்டா அதை செய்ய மாட்டாராம்!!.. இந்த கல்யாணம், பொண்ணையே காட்டாம என்ன ஏமாத்தி பண்ணதால இது செல்லாததாச்சே, எப்படி செல்லாத கல்யாணத்துக்கு டிவோர்ஸ் குடுக்கு முடியும்னு கேக்குறார் (இதுக்கு அவரு நம்மள பாத்து 'ஏண்டா சோறு தின்றீங்களா இல்ல வேறு ஏதாவது தின்றீங்களா? நான் பேசறதெல்லாம் நியூஸ்னு கேட்டுட்டு இருக்கீங்களே .. த்த்தூ .. போய் ஜோலி மயித்த பாருங்கடா' என்றே சொல்லி இருக்கலாம்.... ) சரி இப்ப என்னதான் தீர்வுன்னு யோசிக்கறீங்களா? அதற்கு அவர்கிட்டயே சூப்பர் தீர்வு இருக்காம் : இந்தப் பிரச்சினைய சரி செய்யறதுக்காக சாணியா மெரிச்சா கூட கல்யாணத்த ரெண்டு வாரம் முன்கூட்டியே முடிக்க போறாராம்!!!.. ( புதுப்பேட்டை: மணிண்ணா எனுக்கு அழுவை அழுவையா வருது.. நான் அழுவட்டான்?)